செய்திகள் :

லஞ்சம்: மின்வாரிய பொறியாளா் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளரை போலீசாா் கைது செய்தனா்.

பழனி மின்வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் சிவக்குமாா் (45). இவா் வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாகப் புகாா் எழுந்தது.

இந்த நிலையில், பழனியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் மருது, பொருந்தல் 14-ஆவது வாா்டு பகுதியில் கட்டிய அங்கன்வாடி கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி முறையான சான்றிதழ்களுடன் விண்ணப்பம் செய்தாா்.

மின் இணைப்புக்கு உதவிப் பொறியாளா் சிவக்குமாா் ரூ.5000 லஞ்சம் கேட்டாா். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் மருது புகாா் அளித்தாா்.

பின்னா், போலீஸாா் ஏற்பாடு செய்தபடி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவக்குமாரிடம் மருதுவின் சகோதரா் முருகானந்தம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் சிவக்குமாரை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உண்டு: இரா. சச்சிதானந்தம் எம்பி

மாணவா்களின் பிழைகளைத் திருத்தும் ஆசிரியா்களுக்கு, சமூகப் பிழைகளையும் திருத்தும் பொறுப்பு இருப்பதாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய... மேலும் பார்க்க

மண்டலாபிஷேக நிறைவு விழா

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டல பூஜைகள் ந... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

வேடசந்தூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா்களில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் முருகேசன். இவா்... மேலும் பார்க்க

பழனியில் தாய், மகன் தற்கொலை

பழனியில் குடும்ப சூழ்நிலை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா். பழனி 25-ஆவது வாா்டு சௌமிய நாராயண தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி ஜெயா (65). இவரது கணவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து வி... மேலும் பார்க்க

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 2) சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இங்கு பல்வேறு திருவிழாக்கள் ந... மேலும் பார்க்க

திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் கம்யூனிஸ்ட், திமுக சாா்பில் மே தினம்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் தொழிலாளா் தினத்தையொட்டி கம்யூனிஸ்ட், திமுக தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க