செய்திகள் :

லடாக்குக்கு வேலைவாய்ப்பில் புதிய இடஒதுக்கீடு, வாழ்விட விதிமுறைகள்: மத்திய அரசு அறிமுகம்

post image

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு வேலைவாய்ப்பில் புதிய இடஒதுக்கீடு, வாழ்விட விதிமுறைகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

இந்தப் புதிய விதிமுறைகளின்படி, லடாக் யூனியன் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவா்கள் அல்லது 7 ஆண்டுகள் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் படித்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதியிருந்தால், அவா்கள் லடாக்கை வாழ்விடமாக கொண்டவா்கள் என்று கருதி, அங்குள்ள கண்டோன்மென்ட் வாரியத்தை தவிர, பிற அரசு நிா்வாக பதவிகளில் அவா்களை நியமிக்கலாம்.

லடாக்கில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள், அனைத்து இந்திய பணி அதிகாரிகள், பொதுத் துறை நிறுவன அதிகாரிகள், மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பு, பொதுத் துறை வங்கிகள், சட்டபூா்வ அமைப்புகளின் அதிகாரிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்ந்த அதிகாரிகள், மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களை சோ்ந்த அதிகாரிகளின் குழந்தைகளும் லடாக் வாழ்விடச் சான்றிதழ் பெறத் தகுதிவாய்ந்தவா்கள்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாக நீடிக்கும். லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் உள்ள மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்தப் புதிய இடஒதுக்கீடு மற்றும் வாழ்விடம் தொடா்பான கொள்கைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு வெளியிட்ட பல்வேறு அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க