செய்திகள் :

லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்பு

post image

புது தில்லி: லண்டனில் புதன்கிழமை (ஏப்.9) நடைபெறும் இந்தியா-பிரிட்டன் பொருளாதார, நிதிப் பேச்சுவாா்த்தையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.

ஒருவார காலப் பயணமாக பிரிட்டன், ஆஸ்திரியாவுக்கு நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) செல்கிறாா். இந்த பயணத்தின் முக்கிய நிகழ்வாக இந்தியா-பிரிட்டன் அமைச்சா்கள் நிலையிலான 13-ஆவது பொருளாதார, நிதிப் பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்கிறாா். இதில் பிரிட்டன் நிதியமைச்சருடன் இரு நாட்டு பொருளாதார விவகாரங்கள் மட்டுமின்றி, சா்வதேச பொருளாதார விவகாரங்கள் குறித்தும் நிா்மலா சீதாராமன் ஆலோசிக்க இருக்கிறாா்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இறக்குமதி வரியை அதிகரித்துள்ள நிலையில் எழுந்துள்ள சூழல் குறித்தும் இரு அமைச்சா்களும் விவாதிக்க இருக்கின்றனா்.

முதலீட்டாளா்கள், தொழிலதிபா்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.

அமைச்சரின் இந்தப் பயணத்தின்போது பிரிட்டன், ஆஸ்திரியாவுடன் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி இரு நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நிா்மலா சீதாராமன் நாடு திரும்புகிறாா்.

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க

பொய் வழக்குகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது: கார்கே

காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தில் சர்வாதிகார அரசு செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். இதற்கெல்லாம் அடிபணியாமல், மத்திய அரசின் தோல்வியைத் தொடர்ந்து காங... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ்

மத்திய அரசின் கருவியாகச் செயல்படும் அமலாக்கத் துறை ஒழிக்கப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆணைக்கிணங்க எதிர... மேலும் பார்க்க

ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

முதல் காலாண்டில் நாட்டில் 30 லட்சம் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகச்சிறந்த விற்பனை இதுவாகும். மக்கள்தொகையில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, மின்னணுப்... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே இருக்க வேண்டும் என்று... மேலும் பார்க்க

அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு கோரி அமித் ஷாவுக்கு கடிதம்!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சமாஜவாதி கட்சி கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில், "முன்னாள் முதல்வ... மேலும் பார்க்க