செய்திகள் :

லண்டனில் MBA; கிராமத்தில் பேரீச்சை விவசாயம்... வருடம் ரூ.40 லட்சம் ஈட்டும் பட்டதாரி செல்வது என்ன?

post image

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் லண்டன் சென்று எம்.பி.ஏ. முடித்துவிட்டு இப்போது விவசாயம் செய்து வருகிறார். ஜால்னா அருகில் உள்ள பார்த்கேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குகே என்பவர் லண்டன் சென்று எம்.பி.ஏ. முடித்தார்.

லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ரமேஷ் பன்னாட்டு கம்பெனிகளில் வேலை தேடி அலையவில்லை. தனது தந்தை செய்து கொண்டிருந்த விவசாயத்தைத் தானும் நவீன முறையில் செய்ய முடிவு செய்தார்.

அதேசமயம் வித்தியாசமாகச் செய்ய முடிவு செய்தார். இதற்காக யாரும் செய்யாத பேரீச்சை விவசாயத்தைக் கையில் எடுத்தார். இதில் சாதித்தது குறித்து ரமேஷ் கூறுகையில், ''குஜராத்திலிருந்து பேரீச்சை கன்றுகளைத் தலா 4000 ரூபாய் என்ற அளவில் 400 கன்றுகளை வாங்கினேன். அவற்றை எங்களுக்குச் சொந்தமான 4 ஏக்கரில் 25க்கு 25 என்ற இடைவெளியில் நடவு செய்தேன்.

மூன்று ஆண்டுகள் இயற்கை முறையில் அக்கன்றுகளை வளர்த்தோம். இடைப்பட்ட காலத்தில் இடைவெளியில் சோயாபீன்ஸ் ஊடுபயிராகப் பயிரிட்டோம்.

நான்காவது ஆண்டிலிருந்து பேரீச்சை காய்க்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு மரமும் 50 கிலோ வரை காய்த்து இருக்கிறது. அவற்றைக் கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனை செய்கிறேன்.

400 மரத்திலிருந்து 30 டன் பேரீச்சை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு ரூ.35 முதல் 40 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். எனவே இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் விவசாயத்திற்கு வரவேண்டும்.

விவசாயத்தைத் தொழிலாகக் கருதி அதில் இளைஞர்கள் புதுமையைப் புகுத்து முயற்சி செய்து பார்க்க வேண்டும். எனது தோட்டத்தில் விளையும் பேரீச்சையை மும்பைக்கும், உலர்ந்த பழங்களை வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பத் திட்டமிட்டு இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

வழக்கமாக பேரீச்சை வளைகுடா நாடுகளில் மட்டும் விளையும். ஆனால் இந்தியாவிலும் சிலர் அதனைப் பயிரிட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சேலம்: முதல்வர் ஸ்டாலினின் Road show; மேட்டூரில் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு | Photo Album

தமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர்... மேலும் பார்க்க

'பால் ஏ.டி.எம்... தினமும் ரூ.7,000 வருமானம்' - மாத்தி யோசித்த மகாராஷ்டிரா விவசாயி!

'ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்திருப்போம்... பால் வாங்கினால் எப்படி இருக்கும்?' - இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு விவசாயி. மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ... மேலும் பார்க்க

ஜூன்11 ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் மாபெரும் வேளாண் கண்காட்சி; சிறப்பம்சங்கள் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடியின் அருகே ஜூன் 11 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன், வியாழன்) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு’ நட... மேலும் பார்க்க

'இதுவரை 100 கிலோ கத்தரிக்காய் பறித்துள்ளோம்' - இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாத இடத்தில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம், நர்சரி, மூலிகைத் தோட்டம் அமைத்து அசத்தியிருக்கிறார். மாணவர்களைக் கொண்டு இந்த... மேலும் பார்க்க

மாம்பழம் விலை வீழ்ச்சி: "ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும்" - கவலையில் திண்டுக்கல் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணைப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. கல்லாமாங்காய், இமாமம் பசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரம் ... மேலும் பார்க்க