கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி
மாம்பழம் விலை வீழ்ச்சி: "ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும்" - கவலையில் திண்டுக்கல் விவசாயிகள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணைப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.
கல்லாமாங்காய், இமாமம் பசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரம் உள்ளிட்ட அனைத்து உயர் ரக மாங்கனிகளும் இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக நோய் தாக்குதல், பூ உதிர்தல் போன்றவைகளாலும், இயற்கை சீற்றங்களாலும் இப்பகுதியில் மா விளைச்சல் 50 சதவிகிதம் குறைந்துவிட்டது.
ஆனால், இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட கூடுதல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. மாம்பழ சீசன் தற்போது தொடங்கிய நிலையில் அனைத்து தோப்புகளிலும் மாங்காய்கள் காய்த்து தொங்குகின்றன.
பழுக்கும் நிலையில் தயாராக உள்ள மாம்பழங்கள் பறிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
ஆனால், விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு டன் மாம்பழம் ரூ. 18,000 எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு டன் மாம்பழம் ரூ. 4,500க்கு மட்டுமே எடுக்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இதனால் கடந்த ஒரு வாரமாக மாம்பழங்கள் விற்பனையாகாமல் குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், அழுகி குப்பையில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மாம்பழங்களுக்குக் கிடைக்கும் விலை, எடுப்பு கூலிக்குக் கூட கட்டுபடி ஆகாது என்பதால் விவசாயிகள் தோப்புகளில் மாம்பழங்களைப் பறிக்காமல் விட்டுவிட்டதால் மரங்களிலேயே மாம்பழங்கள் பழுத்து தானாக கீழே விழுந்து தோப்பு முழுதும் சிதறி கிடக்கின்றன.

மிகுந்த நஷ்டம் அடைந்திருக்கும் மருதாநதி அணைப் பகுதி மா விவசாயிகள், "நெல் கரும்புகளுக்குக் கிடைக்கும் ஆதார விலை போல் மாம்பழங்களுக்கும் ஆதர விலையாக ஒரு டன்னுக்கு ரூபாய் 30,000 எனத் தமிழக அரசு நிர்ணயம் செய்து தரவேண்டும்.
தற்போது இளைய தலைமுறைகளிடம் மாம்பழம் சாப்பிடும் ஆர்வம் குறைந்து காணப்படுவதால், தமிழக அரசு மாங்காய் விளைச்சல் உள்ள பகுதிகளில் மாங்கனி திருவிழாக்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தற்போது ஒவ்வொரு தோப்புகளிலும் 50 டன் முதல் 100 டன் வரை மாங்காய், மாம்பழங்கள் பறிக்கப்படாமல் தேங்கியுள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால் இந்த மாம்பழ சீசனுக்கு விவசாயிகளுக்கு ரூபாய் 100 கோடி வரை இழப்பு ஏற்படும்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மாந்தோப்புகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்" என மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.