செய்திகள் :

மாம்பழம் விலை வீழ்ச்சி: "ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும்" - கவலையில் திண்டுக்கல் விவசாயிகள்

post image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணைப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.

கல்லாமாங்காய், இமாமம் பசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரம் உள்ளிட்ட அனைத்து உயர் ரக மாங்கனிகளும் இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன.

தேக்கமடைந்துள்ள மாம்பழம்
தேக்கமடைந்துள்ள மாம்பழம்

கடந்த மூன்று ஆண்டுகளாக நோய் தாக்குதல், பூ உதிர்தல் போன்றவைகளாலும், இயற்கை சீற்றங்களாலும் இப்பகுதியில் மா விளைச்சல் 50 சதவிகிதம் குறைந்துவிட்டது.

ஆனால், இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட கூடுதல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. மாம்பழ சீசன் தற்போது தொடங்கிய நிலையில் அனைத்து தோப்புகளிலும் மாங்காய்கள் காய்த்து தொங்குகின்றன.

பழுக்கும் நிலையில் தயாராக உள்ள மாம்பழங்கள் பறிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

ஆனால், விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும் மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஒரு டன் மாம்பழம் ரூ. 18,000 எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு டன் மாம்பழம் ரூ. 4,500க்கு மட்டுமே எடுக்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இதனால் கடந்த ஒரு வாரமாக மாம்பழங்கள் விற்பனையாகாமல் குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், அழுகி குப்பையில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மாம்பழங்களுக்குக் கிடைக்கும் விலை, எடுப்பு கூலிக்குக் கூட கட்டுபடி ஆகாது என்பதால் விவசாயிகள் தோப்புகளில் மாம்பழங்களைப் பறிக்காமல் விட்டுவிட்டதால் மரங்களிலேயே மாம்பழங்கள் பழுத்து தானாக கீழே விழுந்து தோப்பு முழுதும் சிதறி கிடக்கின்றன.

மா விவசாயிகள்
மா விவசாயிகள்

மிகுந்த நஷ்டம் அடைந்திருக்கும் மருதாநதி அணைப் பகுதி மா விவசாயிகள், "நெல் கரும்புகளுக்குக் கிடைக்கும் ஆதார விலை போல் மாம்பழங்களுக்கும் ஆதர விலையாக ஒரு டன்னுக்கு ரூபாய் 30,000 எனத் தமிழக அரசு நிர்ணயம் செய்து தரவேண்டும்.

தற்போது இளைய தலைமுறைகளிடம் மாம்பழம் சாப்பிடும் ஆர்வம் குறைந்து காணப்படுவதால், தமிழக அரசு மாங்காய் விளைச்சல் உள்ள பகுதிகளில் மாங்கனி திருவிழாக்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தற்போது ஒவ்வொரு தோப்புகளிலும் 50 டன் முதல் 100 டன் வரை மாங்காய், மாம்பழங்கள் பறிக்கப்படாமல் தேங்கியுள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால் இந்த மாம்பழ சீசனுக்கு விவசாயிகளுக்கு ரூபாய் 100 கோடி வரை இழப்பு ஏற்படும்.

தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மாந்தோப்புகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்" என மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'இதுவரை 100 கிலோ கத்தரிக்காய் பறித்துள்ளோம்' - இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாத இடத்தில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம், நர்சரி, மூலிகைத் தோட்டம் அமைத்து அசத்தியிருக்கிறார். மாணவர்களைக் கொண்டு இந்த... மேலும் பார்க்க

ஐஸ் க்ரீம், பால் க்ரீம், ரோஸ் மில்க், பாதாம் பால்; லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல்; நேரடி பயிற்சி

பாலை எப்படி எல்லாம் மதிப்பு கூட்டல் செய்யலாம், அதை எப்படி சந்தைப்படுத்தலாம் என்பது குறித்து நேரடி செயல் விளக்க பயிற்சி மே 23ம் தேதி சென்னை அடுத்த அலமாதியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல... மேலும் பார்க்க

ஜெர்மன், இஸ்ரேல் வேலை வேண்டாம்! - நாடு முழுவதும் தேனிக்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடும் விஞ்ஞானி

விவசாயத்திற்கு தேனிக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மாறி வரும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் தேனிக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டத... மேலும் பார்க்க

ஊட்டி‌: 'புரோக்கோலி ரூ. 250; சுக்குனி‌ ரூ.‌ 85' - எகிறும் சைனீஸ் காய்கறிகளின் விலை; காரணம் என்ன?

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியில் சைனீஸ் ரக காய்கறிகளையும் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக சைனீஸ் கேபேஜ்... மேலும் பார்க்க

"ஒருவரின் தவறால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது!" - விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் ராஜேந்திர ஸ்டேடியம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிணைந்து, தங்களது தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும்... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கே.ஜெயமணிசெங்கமடை,ராமநாதபுரம்.97910 36746வியட்நாம் கறுப்புக் கவுனி, தங்கச் சம்பா, பாஸ்மதி விதைநெல் மற்றும் செம்மரங்கள்.ஆர்.செந்தமிழ்செல்வன்,திருவையாறு,தஞ்சாவூர்.96885 25605நல்ல நில... மேலும் பார்க்க