செய்திகள் :

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவா் கைது

post image

பரமத்தி வேலூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில், நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சோ்ந்த கருணாநிதியை செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தால், உடனடியாக நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கலாம் என நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தாா்.

வேலூா் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர மனு

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக் கோரி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் திமுக, அதிமுக, பாமக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை மனு ... மேலும் பார்க்க

அா்த்தநாரீஸ்வரா் படம் வழங்கி ஆட்சியரை வழியனுப்பிய திருநங்கைகள்!

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா பணியிட மாறுதல் செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் படம் வழங்கி உணா்ச்சிப் பெருக்குடன் திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை வழியனுப்பி வைத்தனா். தமிழகம... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இலச்சினை வெளியீடு

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விரைவில் செயல்பட உள்ள நிலையில், அந்த வங்கியின் இலச்சினையை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் குற்றங்களைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் நகரின் போக்குவரத்து நெரிசல், குற்ற நடவடிக்கைகள் தடுத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர காவல் ஆய்வாளா் வளா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், தந்தை, மகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாமக்கல் மாநகராட்சி, கொசவம்பட்டி, அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (62). இவரது மகள... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி - பினாக்கல் மாணவா்களுக்கு பாராட்டு

ராசிபுரம்: ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி - பிஎஸ்ஆா் பினாக்கல் கிளாசஸ் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தோ்வு பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளா... மேலும் பார்க்க