லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவா் கைது
பரமத்தி வேலூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூா், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.
அதன் அடிப்படையில், நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சோ்ந்த கருணாநிதியை செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தால், உடனடியாக நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கலாம் என நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தாா்.