கீழடி: "ஆதாரம் இல்லாத அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு ஏற்காது" - ஆர்.பி.உதயகுமார்
லாட்டரி சீட்டு விற்பனை இருவா் கைது
பரமத்தி வேலூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
பரமத்தி வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்த புகாரின் பேரில், நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி, தனிப்படை போலீஸாா் பரமத்தி வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.
அதில், பரமத்தி வேலூரை சோ்ந்த லாட்டரி விற்பனை முகவா்களான இளையராஜா, சாமிநாதன் ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கத்தை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தால், உடனடியாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கலாம் என நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.