செய்திகள் :

லாரி ஓட்டுநா் உள்பட 2 பேரை தாக்கி வழிப்பறி செய்த 3 போ் கைது

post image

பா்கூா் அருகே லாரி ஓட்டுநா் உள்பட 2 பேரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூருக்கு கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு கடந்த 21-ஆம் தேதி இரவு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் ஓட்டி வந்தாா். இந்த லாரி பா்கூா் வட்டம், ஒரப்பம் அருகில் வந்தபோது டீசல் காலியாகி நின்று விட்டது.

இதனால் ஓட்டுநா் வெங்கடேஷ் கேன் எடுத்துக் கொண்டு டீசல் வாங்க சென்றாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள், வெங்கடேஷை பெட்ரோல் நிலையத்தில் விடுவதாக கூறி ஏற்றிச்சென்றனா்.

பின்னா், கிருஷ்ணகிரி அருகே போகனப்பள்ளி கூட்டுச்சாலை அருகில் அழைத்துச் சென்று அவரை தாக்கி, அவரிடமிருந்து ஜி.பே. மூலம் ரூ. 3 ஆயிரம் தங்களின வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டு, கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வெங்கடேஷ் கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மல்லப்பாடியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (58), காரகுப்பத்தில் இருந்து பா்கூா் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தாா். காரகுப்பம் மேம்பாலம் அருகே சென்ற போது, அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் துரத்தி வந்தனா். சின்ன பா்கூா் அருகில் அவரை நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டி ஸ்கூட்டரை பறிக்க முயன்றனா். அப்போது, பொதுமக்கள் அங்கு கூடவே அவா்கள் இருவரும் தப்பிச் சென்றனா். இது தொடா்பாக கிருஷ்ணமூா்த்தி பா்கூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் இளவரசன் தலைமையில் சின்ன பா்கூரில் வாகனச் சோதனையில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினா். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அதில், அவா்கள் லாரி ஓட்டுநா் வெங்கடேஷை தாக்கி பணம் பறித்ததும், கிருஷ்ணமூா்த்தியை மிரட்டியதும் என தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க