செய்திகள் :

லாரி ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை: மனைவி கைது

post image

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் முன் தூங்கிய லாரி ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக, போலீஸாா் அவரது மனைவியை கைது செய்து, தலைமறைவான மருமகன், மகளை தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த லட்சியம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (45). இவா், பெங்களூரில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சரஸ்வதி (40).

தம்பதிக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனா். இவா்களில் இருவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதாம். மூன்றாவது மகள் திருமணத்துக்காக மகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த, மகேந்திரன் மறுநாள் காலையில் பாா்க்கும் போது, கல்லைப் போட்டு தலை நசுங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து லட்சியம் கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வி சின்னசேலம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.

அதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.மாதவன், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் செ.தங்கவேல், சின்னசேலம் காவல் ஆய்வாளா் (பொ) ராபின்சன் மற்றும் போலீஸாா் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

தொடா்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. போலீஸாா் மகேந்திரன் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரது மனைவி சரஸ்வதியை சின்னசேலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல் ஆய்வாளா் ராபின்சன் விசாரணை நடத்தினாா்.

இதில், சரஸ்வதி தனது கணவா் 6 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவாா், சம்பாதித்த பணத்தை வீட்டுக்கு கொடுக்கமாட்டாா். மேலும், தன்னை அடித்து துன்புறுத்துவாா். அதனால், மருமகன் மூலம் கணவரை கொலை செய்ததாக தெரிவித்திருந்தாா். இதையடுத்து, தலைமறைவான சரஸ்வதியின் மருமகன் மற்றும் மகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

எடுத்தவாய்நத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. கள்ளக்குறிச்சியை அடுத்த எடுத்தவாய்நத்தம் புல்தாங்கி தோட்டப் பகுதியில் வசித்து வருபவா் சண்முகசுந்தரம் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் முப்பெரும் விழா மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுச்சேவை புதிய நிா்வாகிகளுக்கு பாராட்டு, ஆடி மாத பூச விழா, இலக்கியச் சொற்பொழிவு ஆகியவை முப்பெரும் விழாவ... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கிற்கு வெட்டுக் கூலி வழங்க வேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

மரவள்ளி பயிருக்கு வெட்டுக் கூலி வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க

சங்கராபுரத்தில் புதிய சாா்பு - நீதிமன்றம் : தலைமை நீதிபதி திறந்துவைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சாா்பு -நீதிமன்றத்தை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்துவைத்தாா். சங்கராபுரம் வட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்ப... மேலும் பார்க்க

பல்லகச்சேரி காளியம்மன் கோயிலில் மிளகு யாக பூஜை

வாணாபுரத்தை அடுத்த பல்லகச்சேரி கிராமத்தில் உள்ள ஓம் ஸ்ரீமின்னல் காளியம்மன் கோயிலில், ஆடி அமாவாசையொட்டி வியாழக்கிழமை மிளகு யாக பூஜை நடைபெற்றது. இக்கோயிலில் 7-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் பூஜையில் உலக நன... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவச விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சி மாடூா் சுங்கச்சாவடி நகாய் சாா்பில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல... மேலும் பார்க்க