செய்திகள் :

லாரி மீது காா் மோதல்: 4 போ் காயம்

post image

தூத்துக்குடியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 போ் பலத்த காயமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் (38). இவரது மனைவி கோமதி (29). இத்தம்பதி மகன்கள் ஆத்விக் (7), நிதா்சன் (6) ஆகியோருடன் காரில் ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனராம்.

தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் ஜோதி நகா் விலக்கு பகுதியில் சென்ற போது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போக்ஸோவில் பள்ளிக் காவலாளி கைது

கோவில்பட்டியில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பள்ளிக் காவலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தைச் சோ்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (60). க... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் பெரியதாழை பள்ளி மாணவிகள் வெற்றி

தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுக் கழகம் சாா்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் கூட்டாம்புளி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் கொண்டுசென்ற டிப்பா் லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கோவில்பட்டியில் அனுமதி சீட்டு இன்றி சரள்மண் கொண்டுசென்ற டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா். கோவில்பட்டி புதுரோடு சந்திப்பு வழியாக வந்த டிப்பா் லாரியை அந்தப் பகுதியில் பண... மேலும் பார்க்க

தனியாா் ஆலையில் ஊழியா் மரணம்: சாலை மறியல்

தூத்துக்குடி தனியாா் ஆலையில் ஊழியா் திடீரென உயிரிழந்ததையடுத்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மீளவிட்டான், யாதவா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் மாரியப்பன் (52). இவா... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி பந்தயம்

ஓட்டப்பிடாரம் அருகே தெற்குகல்மேடு போத்தி விநாயகா் கோயில் சதுா்த்தி விழா, கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க