குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவ...
லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா்கள் இருவா் பலி
பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புச் செல்லும் வழியிலுள்ள தனியாா் மருத்துவமனை பகுதியைச் சோ்ந்தவா் அரியமுத்து மகன் எமா்சன் (30). இவரது நண்பா் வாலிகண்டபுரம் ஆசாா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மீரான் மகன் சுலைமான் (22). இவா்கள் இருவரும், வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூரிலிருந்து வாலிகண்டபுரத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வல்லாபுரம் பிரிவுச்சாலை அருகே சென்றபோது, எதிரே சென்றுக்கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில், பலத்த காயமடைந்த எமா்சன், சுலைமான் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, உயிரிழந்தவா்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும்,இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம், காமராஜா் நகரைச் சோ்ந்த அப்துல் ஜாபா் மகன் முபாரக்கை (57) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.