செய்திகள் :

லிபியா: படகு கவிழ்ந்த விபத்தில் 16 பாகிஸ்தானியர்கள் பலி!

post image

லிபியாவில் 64 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 33 பேர் காவல் துறையின் பிடியில் உள்ளதாகவும், லிபியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் மொராக்கோவில் இருந்து 80 பேருடன் வந்த படகு கவிழ்ந்த விபத்தில் 13 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 44 பேர் மனித கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

லிபியாவின் ட்ரிபோலி பகுதியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் கடவுச்சீட்டுகளை வைத்து அவர்கள் பாகிஸ்தானியர்கள் என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

படகில் வந்த 64 பேரில் 37 பேர் உயிருடன் உள்ளனர். 33 பேர் காவல் துறையினர் விசாரணையிலும் ஒருவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 பேர் இதில் காணவில்லை. மீட்கப்பட்ட உடல்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ளது.

தூதரகத்தைத் தொடர்புகொள்ள எண்களும் வழங்கப்பட்டுள்ளன. எண்கள் - 03052185882, +218913870577, +218 91-6425435 (வாட்ஸ்ஆப்).

இதையும் படிக்க | பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்

பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு இனப் பாகுபாடு!

பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண் ஒருவரை அந்நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓடும் ரயிலில் இனரீதியாக அவதூறாகப் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லும் ரயி... மேலும் பார்க்க

பாலஸ்தீன குடியிருப்புப் பகுதிகள் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!

பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட துல்காரெம் குடியிருப்பு மற்றும் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் தொடர்ந்து 17வது நாளாக துல்கா... மேலும் பார்க்க

பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம்: இஸ்ரேல்

ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் போரைத் தொடங்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.மேலும், காஸாவைச் சுற்று பாதுகாப்புப் ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு! உள்துறை எச்சரிக்கை

சிங்கப்பூரில்பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.பயங்கரவாத சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் பெண் உள்பட ம... மேலும் பார்க்க

காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

காஸாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்ட மருத்துவர்களை இஸ்ரேல் ராணுவம் துன்புறுத்துவதாக அவர்களின் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். போரின்போது முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களை சட்டவிரோதம... மேலும் பார்க்க

பொலிவியாவில் தொடர் கனமழை, வெள்ளம்! 24 பேர் பலி!

பொலிவியா நாட்டில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் 8 மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுக்க மழ... மேலும் பார்க்க