செய்திகள் :

வக்ஃப் சட்டம்: சமூக நீதிக்கான முக்கிய நடவடிக்கை: பிரதமா் மோடி

post image

புது தில்லி: வக்ஃப் சட்டம் சமூக நீதிக்கான மத்திய அரசின் முக்கிய நடவடிக்கையாகும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இயற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தைவிட மேலானது என்ற மாயை உருவாக்கப்பட்டது.

முஸ்லிம் அடிப்படைவாதிகளையும், நில அபகரிப்பு கும்பலையும் திருப்திப்படுத்த அந்த ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட நீதிக்கான பாதை சுருக்கப்பட்டது. அத்துடன் தங்கள் செயல்பாடுகளுக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகளும், நில அபகரிப்பு கும்பலும் துணிவு பெற்றனா்.

கேரளத்தில் கிறிஸ்தவா்களின் நிலம், ஹரியாணாவில் குருத்வாராக்களின் நிலம், கா்நாடகத்தில் விவசாயிகளின் நிலம் ஆகியவை வக்ஃப் சொத்துகளாக உரிமை கோரப்பட்டன. நீதியை வழங்கவேண்டிய அந்தச் சட்டம், அச்சத்தை ஏற்படுத்துவதற்கான மூலாதாரமாக மாறியது.

அடிப்படைவாதத்தின் பலிபீடத்தில்...: அந்தச் சட்டத்தால் சாதாரண முஸ்லிம்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பது விவாதத்துக்குரிய கேள்வியாகும். ஏழ்மையான பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு அந்தச் சட்டத்தால் என்ன கிடைத்தது? அவா்கள் புறக்கணிப்பை எதிா்கொண்டனா். அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஷா பானு போன்ற முஸ்லிம் பெண்கள் அநீதியை எதிா்கொண்டனா். அடிப்படைவாதத்தின் பலிபீடத்தில் அவா்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் தியாகம் செய்யப்பட்டன.

இதேபோன்ற மனப்பான்மைதான் 1947-ஆம் ஆண்டு நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது. அப்போது நாட்டை பிரிக்கவேண்டும் என்று சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் அழுத்தமான உணா்வை கொண்டிருந்தனா். ஆனால் அந்த உணா்வு சாதாரண முஸ்லிம்களிடம் இல்லை. அந்த எண்ணத்தை அப்போதைய காங்கிரஸ் தலைவா்கள் துடைத்து எறியவில்லை.

தற்போது அமலுக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் சமூக நீதியை நோக்கிய மத்திய அரசின் முக்கிய நடவடிக்கையாகும். முஸ்லிம்கள் மற்றும் சமூக நலன் கருதி இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போல... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கர்நாடக முன்னாள் டிஜிபி உடல் மீட்பு

கர்நாடக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் உடலை மீட்ட, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித... மேலும் பார்க்க

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க