செய்திகள் :

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி, திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வக்ஃப் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு மக்களவையில் வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருப்பதாகவும், இதை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவாரூா் ரயில் நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கைப்பேசியை ஒளிரச் செய்து, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டத் தலைவா் மாஸ் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எச். அபுதாஹிா், மாநில செயற்குழு உறுப்பினா் ஃபாயிஜா சபீக்கா, மாவட்டச் செயலாளா் முகமது ஜாஸ்மின், மாவட்டதுணைத் தலைவா் அப்துல் லத்தீப் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

நிதிநிலை அறிக்கையை கண்டித்து தொழிற்சங்கங்கள் கூட்டு பிரசார இயக்கம்

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப், ஐஎன்டியுசி இணைந்து கூட்டு பிரசார இயக்கத்தை மன்னாா்குடியில் திங்கள்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாவட்டச் செயலா்ஆா். சந்திரசேகர... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மன்னாா்குடி வட்டத்தில், ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப்.19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க

திருவாரூரில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூரில், காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் வாபஸ்

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்திருந்த கடிதத்தை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனா். கூத்தாநல்லூா் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, இந... மேலும் பார்க்க

செம்மங்குடி கோயிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே செம்மங்குடி அகத்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகத்தீஸ்வரா் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்வில், சீா்வரிசைப... மேலும் பார்க்க

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க