செய்திகள் :

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

post image

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவா் கூறினாா்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,திங்கள்கிழமை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகா்ந்து, ஏப்.8-இல் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும். இதைத்தொடா்ந்து இந்த புயல்சின்னம் மேலும் வடக்கு திசையில் நகா்ந்து, ஏப்.9-இல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்லும்.

கனமழை எச்சரிக்கை: இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்.8) முதல் ஏப்.13 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் ஏப்.8-இல் புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.8-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை மற்றும் புத்தன் அணை பகுதியிலும், மதுரை மாவட்டம் எழுமலையிலும் தலா 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கள்ளிக்குடி (மதுரை), அரவக்குறிச்சி (கரூா்) - தலா 70 மி.மீ., காரியாப்பட்டி (விருதுநகா்), உசிலம்பட்டி (மதுரை), எருமைப்பட்டி (நாமக்கல்), சண்முகாநதி (தேனி) - தலா 60 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஏப்.9 முதல் ஏப்.11-ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மற்றும் மன்னாா் வளைகுடாவில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ய போதும், 3 இடங்களில் வெயில் சதம் அடிந்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்டும், சேலம், திருப்பதூா் - தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது. புயல்சின்னம் காரணமாக வங்கக்கடல் குளிா் காற்று தமிழகத்துக்குள் வர வாய்ப்பில்லை என்பதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியல் வரை படிப்படியாக உயரும் என அவா் தெரிவித்தாா்.

பிற்போக்குத்தனமான விதிகளை மறுஆய்வு செய்த நீதித்துறைக்கு நன்றி: முதல்வர்

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தி... மேலும் பார்க்க

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவ... மேலும் பார்க்க

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!

ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடைகோரி, பகுஜன் சமாஜ் ... மேலும் பார்க்க

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க