செய்திகள் :

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது

post image

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை உருவானது. இது மேலும் வடக்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் புயல் சின்னம் காரணமாக, அரபிக் கடல் காற்று இழுக்கப்படுவதால், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் நாள்களில் தென்மேற்குப் பருமழை தீவிரமடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை: தென்னிந்திய கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதன்கிழமை (மே 28) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மே 28-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், மே 29, 30 தேதிகளில் கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

260 மி.மீ. மழை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 260 மி.மீ. மழை பதிவானது. மேலும், எமரால்டு (நீலகிரி) - 130 மி.மீ., மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை) - தலா 120 மி.மீ., குந்தா பாலம் (நீலகிரி), தேக்கடி (தேனி) - 110 மி.மீ., பெரியாறு (தேனி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:  மே 28 முதல் மே 30 வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை: சென்னையில் அம்பத்தூா், ஈக்காடு தாங்கல், வடபழனி, கிண்டி, பெரம்பூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

புதன்கிழமை (மே 28) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்

அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சா... மேலும் பார்க்க

கல்வி விருது விழா தொடங்கியது! மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகின்றன.மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க

தமாகா நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... மேலும் பார்க்க

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்து... மேலும் பார்க்க