செய்திகள் :

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

post image

வங்கதேசத்தில், அடுத்தாண்டு (2026) பிப்ரவரியில் அந்நாட்டின் பொது தேர்தல் நடத்தப்படும் என முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

வங்கதேசத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த 2024 ஜூலையில் அந்நாட்டின் மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரது ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முஹம்மது யூனஸ் தலைமையில், அந்நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. ஜூலை புரட்சி என்றழைக்கப்படும் இந்தப் போராட்டங்கள் வெற்றிப் பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தொலைக்காட்சி மூலம் இடைக்காலத் தலைவர் யூனுஸ் நாட்டு மக்களிடம் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“தேசியளவிலான பொது தேர்தலை அடுத்த ரமலானுக்கு முன்னதாக, 2026-ம் ஆண்டில் பிப்ரவரியில் நடத்துமாறு, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு, இடைக்கால அரசின் சார்பாக நான் கடிதம் எழுதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வங்கதேசத்தின் பொது தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரமலான் பிப்ரவரி 17 அன்று துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பு பொது தேர்தல் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

In Bangladesh, the interim government led by Muhammad Yunus has announced that the country's general elections will be held in February next year (2026).

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் கொள்ளை போகின்றன! - ஐ.நா தகவல்

காஸாவுக்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய லாரிகள், இடையிலே வழிமறிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான காஸா போர் இரண்டாவது ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிற... மேலும் பார்க்க

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

மனிதத் திறமைக்கான எல்லையை செய்யறிவு மிக வேகமாக மாற்றியமைத்துக்கொண்டிருக்கும் வேளையில், மிகச் சிறப்பாக செயலாற்றக் கூடிய இளைஞர்களுக்கு இன்னமும் உலகில் தேவை இருக்கிறது என்பதையே, மத் டெய்ட்கேவின் செய்தி க... மேலும் பார்க்க

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

ரஷியாவிடம் இருந்து அமெரிக்காவும் இறக்குமதி செய்வதாக இந்தியா எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளார்.ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யு... மேலும் பார்க்க

யேமன் அகதிகள் படகு விபத்து: ஐ.நா. புதிய புள்ளிவிவரம்

யேமன் அருகே அகதிகள் படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 56 எனவும், 132 போ் மாயமாகியுள்ளதாகவும் ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (ஐஓஎம்) தற்போது புதிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. ம... மேலும் பார்க்க

5,500 கி.மீ. ஏவுகணைகளுக்கு சுயதடை நீக்கம்: ரஷியா அறிவிப்பு

500 முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை-தொலைதூர (இன்டா்மீடியேட்) வகை ஏவுகணைகளை தயாா்நிலையில் நிறுத்திவைக்க தாங்கள் சுயமாக விதித்திருந்த தடையை விலக்கிக்கொண்... மேலும் பார்க்க

பிரேஸில்: பொல்சொனாரோவுக்கு வீட்டுக் காவல்

பிரேஸில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவை வீட்டுக் காவலில் வைக்க அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மொரேஸ் வெளியிட்டுள்ள தீா்ப்பில், நாடாளுமன்ற உறுப்ப... மேலும் பார்க்க