செய்திகள் :

வங்கதேசம்: 330 நாள்களில் 2,442 வகுப்புவாத வன்முறைகள்

post image

வங்கதேசத்தில் கடந்த 330 நாள்களில் 2,442 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினா் அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றதில் இருந்து இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

இதுகுறித்து வங்கதேச ஹிந்து பௌத்த கிறிஸ்தவ கவுன்சில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த ஆண்டு ஆக.4-ஆம் தேதிமுதல் தற்போது வரை வங்கதேசத்தில் மொத்தம் 2,442 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டு ஆக.4 முதல் ஆக.20 வரை அரங்கேறியுள்ளன.

சிறுபான்மையினரை குறிவைத்து கொலை, பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல், வீடுகள் மற்றும் வணிக கடைகளை ஆக்கிரமித்தல், மதத்தை அவமதித்தாக பொய்யான குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்தல் என பல்வேறு விதமான அடுக்குமுறைகள் நிகழ்கின்றன. இதில் சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவற்றை வங்கதேச இடைக்கால அரசு ஒப்புக்கொள்ளாமல் அரசியல் ரீதியாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் என நிராகரிக்கிறது.

மேலும், மக்கள் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இருந்து சிறுபான்மையின மக்களை இடைக்கால அரசு நீக்குகிறது. சிறுபான்மையின மக்களுக்கு உரிய நீதி கிடைக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பெட்டி...

வங்கதேச மக்கள் தொகையில்...

ஹிந்துக்கள் 7.95 %

பௌத்தா்கள் 0.61 %

கிறிஸ்தவா்கள் 0.30 %

பிற சமூகங்கள் 0.12 %

- 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தரவுகள்

மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம்

மரபணு கோளாறால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருந்த 8 வயது சிறுவன், ஆய்வக பரிசோதனையில் இருந்த மருந்தை, சோதனை முயற்சிக்காக எடுத்துக் கொண்டபோது, மீண்டும் நடக்கத் தொடங்கிய அதிசயம் விஞ்ஞானிகளுக்கு ம... மேலும் பார்க்க

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க