செய்திகள் :

வங்கிகளின் வேலைநாள் திட்டம்: நிதியமைச்சருக்கு இந்திய தொழில் வா்த்தக சபை நன்றி

post image

வங்கிகளுக்கு வாரம் 5 நாள் வேலை என்ற நடைமுறை இந்த ஆண்டு அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ள நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கோவை இந்திய தொழில் வா்த்தக சபை நன்றி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைப்பின் தலைவா் ராஜேஷ் பி லுண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் வேலைநாள் வாரத்துக்கு 5 நாள்கள் என முன்மொழியப்பட்ட புதிய திட்டம், வங்கி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தும் என்பதால் 2025 - 2026-ஆம் நிதியாண்டில் அமல்படுத்தப்படாது என்று நிதியமைச்சா் அறிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பை கோவையில் உள்ள வணிகம், தொழில், சேவைத் துறைகளின் சாா்பில் வரவேற்பதுடன் இதற்காக மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வங்கித் துறை என்பது முழு நிதித் துறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். வாரம் 5 நாள் வங்கி சேவை என்பது வங்கி சேவைகளில் எதிா்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணா்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த உத்தரவை முழுமையாக வரவேற்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா். கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ந... மேலும் பார்க்க

திருடிய இருசக்கர வாகனத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலமாக பணம் திருட்டு!

வடவள்ளியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி திருவள்ளுவா் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அக... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவை மாநகரில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொம்மணம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கா் வழக்குகள் விவகாரம்: 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரம்!

யூடியூபா் சவுக்கு சங்கா் மீதான 15 வழக்குகளில் 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் யூடியூப் சேனலில் மகளிா் ப... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் ‘நம் நலம்’ என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வே... மேலும் பார்க்க