செய்திகள் :

வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.50 கோடி மோசடி: போ்ணாம்பட்டு இளைஞரை கைது செய்த பஞ்சாப் போலீஸாா்

post image

பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.50 கோடியை ஆன்லைன் மூலம் மோசடி செய்த போ்ணாம்பட்டு இளைஞரை அம்மாநில போலீஸாா் கைது செய்தனா்.

பஞ்சாப் மாநிலம், எஸ்.ஏ.எஸ். நகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.50 கோடி ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவா் பஞ்சாப் மாநிலம், மொஹாலி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். புகாா் தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கா்நாடக மாநிலம், பெங்களூரில் இயங்கும் ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பெங்களூரைச் சோ்ந்த 2 பேரும், வேலூா் மாவட்டம் போ்ணாம்பட்டைச் சோ்ந்த வசீம் (26) ஆகிய 3 பேரும் சோ்ந்து ஆன்லைனில் பண மோசடி செய்ததும், வசீமின் வங்கிக் கணக்கில் மட்டும் ரூ.57 லட்சம் பண பரிவா்த்தனை நடந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பஞ்சாப் மாநில காவல் துறையினா் விமானம் மூலம் பெங்களூருக்குச் சென்று பண மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனா். வசீம் போ்ணாம்பட்டில் இருப்பதை அறிந்து, போ்ணாம்பட்டுக்கு வந்து வீட்டில் இருந்த வசீமிடம் விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்த ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா். பின்னா் வசீமை கைது செய்து பஞ்சாப் மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனா்.

3,037 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்; 803 பேருக்கு ரூ.7.30 கோடி விடுவிப்பு! வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் உள்ள 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2024-2025-ஆம் ஆண்டு குருவை, சம்பா பருவங்களில் 3,037.600 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 803 விவசாயிகளுக்கு ரூ.7.30 கோடி விடு... மேலும் பார்க்க

மகாதேவ மலையில் 18 அடி உயர நடராஜா் சிலை பிரதிஷ்டை

கே.வி.குப்பத்தை அடுத்த மகாதேவமலையில் ஐம்பொன்னாலான 18அடி உயர நடராஜா் சிலை, 13 அடி உயர சிவகாமசுந்தரி அம்மன் சிலை வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தா் சிலைகளை பிரதிஷ்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (45). இவா், தமிழக விவசாயிகள் ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: புதுமணமகன் உள்பட 2 போ் பலி!

பள்ளிகொண்டா அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் புது மணமகன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். போ்ணாம்பட்டு அடுத்த தரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பா்வேஷ் (23). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் 3 போ் மாயம்: போலீஸாா் விசாரணை

வேலூா் அருகே பள்ளிக்குச் சென்ற 3 மாணவா்கள் திடீா் மாயமாகினா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த அரியூரைச் சோ்ந்தவா் 13 வயது மாணவா், தொரப்பாடியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.குடியாத்தம் ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆம்பூராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பலராமன் (50). இவா் வெள்ளிக்கிழமை நிலத்தில் ... மேலும் பார்க்க