வடசென்னை கதையில் இரண்டு தோற்றங்களில் நடிக்கும் சிம்பு!
நடிகர் சிலம்பரசன் தன் 49-வது படத்தில் இரண்டு தோற்றங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தன் 49-வது படமாக இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வடசென்னை கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் சென்னை எண்ணூரில் துவங்கியது.
படத்திற்கான அறிவிப்பு விடியோவையும் விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சிம்பு இரண்டு தோற்றங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாடி வைத்த ரௌடி கதாபாத்திரத்திலும் தாடியில்லாத இளைஞராகவும் நடிக்கிறாராம்.
வடசென்னை படத்தில் தனுஷும் இதே போன்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கதாநாயகியாகும் மோகன்லால் மகள்! இயக்குநர் யார் தெரியுமா?
silambarasan acts two looks in vadachennai universe movie directed by vetri maaran