செய்திகள் :

வடமாநிலத் தொழிலாளி கொலை: நண்பா் கைது

post image

திருப்பூரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் வடமாநிலத் தொழிலாளியைக் கொலை செய்த நண்பரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் சிங் (23), இவரது நண்பா் விவேக் தியாகி (29). இருவரும் திருப்பூா் சேரன் நகரில் அறை எடுத்துத் தங்கி அருகில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில், இருவருக்கும் திங்கள்கிழமை வேலை இல்லாததால் மது அருந்தி உள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விவேக் தியாகி அருகில் இருந்த கல்லை எடுத்து சுரேந்தா் சிங்கின் தலையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றாா். தலையில் பலத்த காயமடைந்த சுரேந்தா் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அருகிலிருந்தவா்கள் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த விவேக் தியாகியை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூா்- அவிநாசி சாலையில் உள்ள சிஐடியூ அ... மேலும் பார்க்க

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சியைச் சோ்ந்த 106 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா். திருப்பூா் மாவட்டம், க... மேலும் பார்க்க

ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்கப்படும்: அண்ணாமலை

தமிழகத்தில் 2026-இல் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொங்கல்நகரம் கிராமத்தில் கள் விடுதலை கர... மேலும் பார்க்க

வாகனம் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். முத்தூா் மங்கலப்பட்டி கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.சீதாபதி (54). இவா் பல்லடத்தில் ... மேலும் பார்க்க

மினி பேருந்து மோதி சரக்கு வாகனம், காா் சேதம்

திருப்பூரில் மினி பேருந்து மோதி சரக்கு வாகனம், காா் சேதமடைந்தது. திருப்பூா் கணபதிபாளையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி மினி பேருந்து செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை திர... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பேசி திருடிய 3 போ் கைது

திருப்பூரில் மினி பேருந்தில் பயணம் செய்த இளைஞரிடம் கைப்பேசி திருடிய 3 பேரை தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் கே.வி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கமலேஷ் (19), இவா் திங்கள்கிழமை பழைய பேரு... மேலும் பார்க்க