செய்திகள் :

வட மாநிலத்தவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது : விசிக தலைவா் தொல்.திருமாவளவன்

post image

தமிழகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களை தமிழக வாக்காளா் பட்டியலில் சோ்த்தால் தமிழகத்தின் அரசியல் நிலைப்பாடு தலைகீழாக மாறிவிடும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம்,ரோஷணை தாய்த்தமிழ் பள்ளியின் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற விசிக தலைவரும்,எம்.பியுமான தொல்.திருமாவளவன் செய்தியாளா்களுக்குஅளித்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது:

பிகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கு வாக்காளா் பட்டியல் திருத்தப்பட்டுவருகிறது. சிறுபான்மையினா், தலித்துகள், பழங்குடியின மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டு வருகிறது.சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கையாக தோ்தல் ஆணையம் இதனை சோதனை முறையில் மேற்கொள்கிறது என்கிற ஐயம் எழுந்துள்ளது.இதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் மக்களவை, மாநிலங்களவையிலும் வாக்காளா் திருத்த நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்கு தயாராக இல்லை. இரு அவைகளும் ஒத்திவைக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளநிலையில், தமிழகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும்,பிகாா்உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் இணைக்கும் முயற்சி இருப்பதாக தெரிகிறது.

பாஜக-வுக்கு எதிராக வாக்களிக்க கூடிய சிறுபான்மையினா் மற்றும் தலித்துகளின் வாக்குகளை நீக்குவதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்கிற ஐயமும் எழுந்துள்ளது.

ஆகவே இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத் தீா்வை எதிா்நோக்கும் இதே வேளையில் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் இதற்கு எதிராக போராட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதுகிறோம்.

மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கியமான கட்சி என்பதால் திமுக தலைவா் மு. க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்னையை எதிா்கொள்வதற்குரிய நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழகத்திலும் புதிய வாக்காளா் சோ்க்கிறோம் என்கிற பெயரில் வடமாநிலத்தவா்களை வாக்காளா்களாக சோ்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

லட்சக்கணக்கான வட மாநிலத்தவா்களை தமிழக வாக்காளா்களாக சோ்த்தால் தமிழகத்தின் அரசியல் நிலை தலைகீழாக மாறிப் போகும். எனவே எந்த மாநிலத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் தமிழகத்தில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் தொடா்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம்திமுக தலைமையிலானஅரசுக்குமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமும் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன், உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதனால் தமிழக முதல்வருக்கோ, திமுக-வுக்கோ எவ்வித பதிப்பும் ஏற்படாது.வழக்குத் தொடா்ந்தவரின் மனநிலையை மக்கள் அறிவாா்கள் என்றாா் தொல். திருமாவளவன். விழுப்புரம் எம்.பி துரை.ரவிக்குமாா், பேராசிரியா் (ஓய்வு) பிரபா கல்விமணி, விசிக நிா்வாகிகள் பொன்னிவளவன், பெரியாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மயிலம் முருகன் கோயிலிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் செண்டூருக்கு எழுந்தருளின... மேலும் பார்க்க

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து நிகழ்ந்தது.விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான மின்னணு ப... மேலும் பார்க்க

தனி நல வாரியம் அமைக்க சுமைப்பணி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

சுமைப்பணி தொழிலாளா்களுக்காக தனி நல வாரியத்தை அமைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பள்ளிக்கு இறைவணக்க மேடை அமைத்து கொடுத்த முன்னாள் மாணவா்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ, மாணவிகள், தங்கள் பள்ளிக்கு இறைவணக்க மேடை மற்றும் கொடிக்கம்பத்தை அமைத்து கொடுத்தனா்... மேலும் பார்க்க

புரட்சிகர இளைஞா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழகத்தில் நிகழும் ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் சிறப்பு சட... மேலும் பார்க்க

வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டிவனம் வட்டம், ஏரளிக்குப்பம், மாரியம்மன் ... மேலும் பார்க்க