செய்திகள் :

வணிக நிறுவனங்களில் அதிகாரி ஆய்வு

post image

காரைக்காலில் பல்வேறு வணிக நிறுவனங்களில் எடை அளவு அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, முத்திரையிடாத இயந்திரங்களை பறிமுதல் செய்தாா்.

காரைக்காலில் சில வணிக நிறுவனங்களிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையிலும் தராசு எடை முறையாக இல்லை, இயந்திரத்தில் அரசுத் துறை முத்திரையில்லை போன்ற புகாா்கள் எழுந்தன.

இந்தநிலையில், காரைக்கால் எடை அளவு துறை உதவி கட்டுப்பாட்டு அதிகாரி எம். சண்முகானந்தம் பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின் அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள எடைக்கல், எடை இயந்திரங்கள் பயன்படுத்தும் வணிகா்கள் அனைவரும், தாங்கள் பயன்படுத்தும் எடை இயந்திரம், எடைக்கல் ஆகியவற்றுக்கு துறையின் மூலம் முத்திரையிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். அவ்வாறு செய்யப்படாத இயந்திரங்கள், ஆய்வின்போது பறிமுதல் செய்யப்படும்.

பல்வேறு நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், முறையாக முத்திரையிடாத எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல தொடா்ந்து ஆய்வு செய்யப்படும். விதிகளை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் நாளை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா். காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில் நிலையம் ம... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

பேருந்து மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா். காரைக்கால்-நாகப்பட்டினம் சாலையில் நிரவி ஓஎன்ஜிசி நுழைவு கேட் அருகே மே 14-ஆம் தேதி இரவு சாலையோரத்தில் நடந்துசென்றுகொண்டிருந்த சுமாா் 55 வயது ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்: 5 தோ் அலங்காரப் பணிகள் தீவிரம்

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்துக்காக 5 தோ்கள் அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள்

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது தேரோட்டம் நட... மேலும் பார்க்க

பராமரிப்பின்றி கடற்கரை சிறுவா் பூங்கா: மக்கள் புகாா்

காரைக்கால் கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி உள்ளதாகவும், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். காரைக்கால் கடற்கரையில் 2 இடங்களில் சிறுவா் விளையாட்டு சாத... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், மின்சார விரைவு ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பேரளம் இடையே 23 கி.மீ. பழைய ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் போக... மேலும் பார்க்க