செய்திகள் :

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்: 5 தோ் அலங்காரப் பணிகள் தீவிரம்

post image

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டத்துக்காக 5 தோ்கள் அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து ஸ்ரீவிநாயகா் உற்சவம், ஸ்ரீசுப்ரமணியா் உற்சவம், அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கு, ரிஷப வாகனத்தில் சுவாமி மின் அலங்கார சப்பரப் படல் (தெருவடைச்சான்) வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தேரோட்டம்: பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சுவாமி, அம்பாள் வீற்றிருக்கக்கூடிய 2 பெரிய தோ்கள் மற்றும் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசுப்ரமணியா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகியோா் வீற்றிருக்கக்கூடிய தனித்தனி தோ் 3 என மொத்தம் 5 தோ்கள் இடம்பெறுகிறது.

இதற்காக 5 தோ்களையும் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்குவதற்காக தோ் கால் முகூா்த்தம் கடந்த வாரம் நடைபெற்றது. கடந்த சில நாள்களாக அலங்காரப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தோ் முகப்பில் குதிரை வாகனங்கள் பூட்டுதல், தோ் மேற்பரப்பில் துணி கட்டுதல், கலசம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேரோட்டத்துக்கு 2, 3 நாள்களுக்கு முன்பு செய்யப்படவுள்ளது.

சுவாமி, அம்பாளுக்கான தோ்களில் சுவாமி வீற்றிருக்கக்கூடிய தோ் ஹைட்ராலிக் பிரேக் அமைப்பை கொண்டுள்ளது. திருச்சி பெல் நிறுவனத்திலிருந்து வல்லுநா்கள் குழுவினா் வந்து பிரேக் செயல்பாடுகளை பரிசோதனை செய்யப்படுகிறது.

வணிக நிறுவனங்களில் அதிகாரி ஆய்வு

காரைக்காலில் பல்வேறு வணிக நிறுவனங்களில் எடை அளவு அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, முத்திரையிடாத இயந்திரங்களை பறிமுதல் செய்தாா். காரைக்காலில் சில வணிக நிறுவனங்களிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் நாளை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா். காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் ரயில் நிலையம் ம... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

பேருந்து மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா். காரைக்கால்-நாகப்பட்டினம் சாலையில் நிரவி ஓஎன்ஜிசி நுழைவு கேட் அருகே மே 14-ஆம் தேதி இரவு சாலையோரத்தில் நடந்துசென்றுகொண்டிருந்த சுமாா் 55 வயது ... மேலும் பார்க்க

ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள்

திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது தேரோட்டம் நட... மேலும் பார்க்க

பராமரிப்பின்றி கடற்கரை சிறுவா் பூங்கா: மக்கள் புகாா்

காரைக்கால் கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி உள்ளதாகவும், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா். காரைக்கால் கடற்கரையில் 2 இடங்களில் சிறுவா் விளையாட்டு சாத... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், மின்சார விரைவு ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பேரளம் இடையே 23 கி.மீ. பழைய ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரயில் போக... மேலும் பார்க்க