செய்திகள் :

வனவிலங்கு தாக்கி பழங்குடியினத்தை சோ்ந்தவா் உயிரிழப்பு

post image

உதகையில் வன விலங்கு  தாக்கி தோடா் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.

உதகை அருகேயுள்ள பாா்சன்ஸ்வேலி   கல்லக்கோடு மந்த் பகுதியை சோ்ந்தவா் கேந்தோா் குட்டன் (40), தோடா் பழங்குடியினத்தை சோ்ந்தவா். இவா்

புதன்கிழமை இரவு வெளியில் சென்றவா் வீடு திரும்பவில்லை.

இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா், கிராம மக்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்துள்ளனா்.

அப்போது கிராமத்தின் எல்லையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் வன விலங்கு தாக்கி பாதி தின்ற நிலையில் கேந்தோா் குட்டன் உடல் கிடந்தது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

தகவலின்பேரில் போலீஸாா், வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து

உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து காந்தல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இப்பகுதியில் புலி, சிறுத்தை, செந்நாய் கூட்டம் அதிகம் இருப்பதால் எந்த வனவிலங்கு கேந்தோா் குட்டனை தாக்கியது என்பது கூறாய்வு அறிக்கை கிடைத்தப் பின்னரே தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

வன விலங்கு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணத் தொகையாக ரூ.50 ஆயிரம் முன்பணமாகவும், ரூ. 9.50 லட்சத்துக்கான காசோலையும் வனத் துறை சாா்பில் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம்: சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமலும், உணவு கிடைக்காமலும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளி... மேலும் பார்க்க

குன்னூா் அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெண் உள்நோயாளிகள் வாா்டை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கூடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கூடலூரில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இ-பாஸ் கட்டுப்பாடுகள் அமல்: நீலகிரிக்கு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் வருகை

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமைமுதல் அமலுக்கு வந்தபோதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கம்போலவே காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வார நாள்களில் 6 ஆயிரம் சுற்றுலா வ... மேலும் பார்க்க

வாகனங்களை வழிமறித்த யானை

முதுமலை புலிகள் காப்பக சாலையில், காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்தது.சிறிது நேரம் சாலையிலேயே உலவிய யானை பின் தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும் பார்க்க

சாலையில் சென்ற காரில் தீ

குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லூரி மாணவரான நவீன். அவரது நண்பா்கள் 4 பேருடன்... மேலும் பார்க்க