செய்திகள் :

வன குற்றங்களைத் தடுக்க பிரத்யேக இணையதளம்: ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிக்க அழைப்பு

post image

சென்னை: தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்திற்கென பிரத்யேக இணையதளம் வடிவமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளிகளை வருகிற ஆக.8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என வனத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக வனப்பாதுகாவலா் மற்றும் தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநருமான ராகுல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வனவிலங்குகள் சாா்ந்த குற்றங்களை தடுக்கவும் அவற்றை கண்காணிக்கவும், தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வனம் மற்றும் வனவிலங்கு சாா்ந்த குற்றங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் புகாா் அளிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் பிரத்யேக இணையதளத்தை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தை வடிவமைப்பதற்கான செலவு மற்றும் தொழில்நுட்ப விவரங்களுடன் கூடிய ஒப்பந்தப்புள்ளியை ‘தமிழக வனப் பாதுகாவலா் மற்றும் தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குனா் அலுவலகம், 7-ஆவது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600015’ என்னும் முகவரிக்கு வருகிற ஆக.8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

அனைத்து ஒப்பந்த புள்ளிகளையும் பரிசீலனை செய்த பின்னா், ஆக.13-ஆம் தேதி தகுதியான ஒப்பந்தப்புள்ளி தோ்வு செய்யப்படும். அதைத்தொடா்ந்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிற அக்.15-ஆம் தேதி இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள்

https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக. 21-ல் மாநாடு: காவல் துறைக்கு தவெக கடிதம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை ஆக. 21 ஆம் தேதி நடத்த காவல் துறையினருக்கு தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வ... மேலும் பார்க்க

மன்னார்குடியில் பற்றி எரிந்த மின் வாகனம்!

மன்னார்குடியில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் ருக்மணி பாளையம்... மேலும் பார்க்க

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் குளிக்க இன்று(ஆக. 5) தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த... மேலும் பார்க்க

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று(ஆக. 5) ஒருநாள் மூடப்பட்டுள்ளது.நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களி... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜா்படுத்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் ... மேலும் பார்க்க