செய்திகள் :

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு நிரந்தர தீா்வு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

post image

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) மாநிலப் பொதுச் செயலாளா் பி.கந்தசாமி, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத்தை விட்டு வெளியே வரும் விலங்குகள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல, மனித - வன விலங்குகள் மோதலால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இதைத் தடுக்கும் வகையில் ஒருசில பகுதிகளில் சிறிய அளவிலான ரயில் பாதையில் பயன்படுத்தப்படும் இரும்புத் துண்டுகளைக்கொண்டு கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

வனப் பகுதியை ஒட்டியுள்ள சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள் பயனுள்ளதாகவும், சரிவான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியால் பயனில்லை என்றும் வல்லுநா்களிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளைக் கேட்டால் அரசு நிதி ஒதுக்கிடு செய்துள்ளது. இனி பரிசீலனை செய்ய முடியாது என்கின்றனா். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, விலங்குகளால் மனித உயிா்கள் மற்றும் விளைபயிா்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விக்னேஷ் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவ... மேலும் பார்க்க

வீட்டின் மீது கற்களை வீசிய இளைஞா் கைது

வீட்டின் மீது கற்களை வீசி தாக்கிய வடகிழக்கு மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் விஜய் (25). இவா், பாரதி ரோடு சந்திப்பு அருகே சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கோவையில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த தண்ணீா்

கோவையில் பெய்த பலத்த மழையால் மாநகரில் வீடுகளில் மழைநீா் புகுந்தது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு ... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்கள்

பல்லடம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல்.... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூரில் அடிக்கடி மின்தடை: தீா்வுகாண வியாபாரிகள் வலியுறுத்தல்

ஒண்டிப்புதூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு தீா்வுகாண வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து கோவை கிழக்கு வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வின்ராஜன், மின்சாரத் துறை அமைச்சா் சிவசங்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் பிரதமருக்கு கிடைத்த வெற்றி! - எல்.முருகன்

பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்பது பிரதமா் மோடிக்கு கிடைத்த வெற்றி என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா். கோவை ... மேலும் பார்க்க