செய்திகள் :

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

post image

மாலைப்பாங்கான மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் அமைக்கும்போது கூடுதல் கிலோமீட்டர் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேரள அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில்,

பழங்குடி மக்கள் அடர்த்தியாக உள்ள மாவட்டங்களில் பழங்குடி கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, மலைப்பாங்கான மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் அமைக்கும்போது கூடுதல் கிலோமீட்டர் ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளது.

கேரள மாநில கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்திடம் கூடுதல் கிலோமீட்டர் ஒதுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வயநாடு ஒரு லட்சிய மாவட்டமாகவும், கணிசமான பழங்குடி மக்கள் தொகையைக் கொண்டதாகவும், எனவே சிறப்புப் பரிசீலனைக்குத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வயநாடு நாடாளுமன்றத் தொகுதியின் தனித்துவமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் அனைத்து வளர்ச்சிக்கும் இணைப்பு மிக முக்கியமானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேரளத்தில் கட்டப்படவுள்ள 500 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளில், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக வயநாடு மாவட்டத்திற்கு 20 கிலோமீட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அது போதுமானதாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமை ஒப்புதல் அளித்த 300 சாலைகளுக்கான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அவர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Bihar Chief Minister Nitish Kumar on Tuesday express grief over the death of veteran leader Satyapal Malik, who had served as the governor of the state for close to a year.

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சட்டப்பேரவை வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு பல்வேறு... மேலும் பார்க்க

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனக்கு ஹிந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி மீது அதீதமான ஈர்ப்பு (க்ரஷ்) இருந்ததாகக் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் தனது அனல்பறக்கும் பேச்சினால் பிரபலமானவர் திரிணம... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

மணிப்பூர் மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், கடந்த பிப்ரவரி மா... மேலும் பார்க்க

தில்லி அரசுக்கு எதிராக அணிதிரண்ட பெற்றோர்கள்: சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்!

தில்லி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை(ஆக. 4) தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை மசோதாவை (தில்லி... மேலும் பார்க்க

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

மத்தியப் பிரதேசத்தில், குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண் பக்தர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சேஹூர் மாவட்டத்தில், இருந்து நாளை (ஆக.6) ஏராளமான பக்தர்கள் கன்வார் யாத... மேலும் பார்க்க

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

தன்னுடைய மறைந்த தாயின் தனியார் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.1,13,56,000 கோடி வரவு வைக்கப்பட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை விட ஒரே நாளில் பணக்காரராகியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.வாயைப் பிளந்துகொண்டு அ... மேலும் பார்க்க