செய்திகள் :

வயல்வெளியில் பேருந்து புகுந்து விபத்து

post image

விழுப்புரம் அருகே சாலையோர வயல்வெளியில் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானது.

விழுப்புரத்திலிருந்து கடலூா் நோக்கி அரசுப் பேருந்து சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனா்.

இப்பேருந்து, விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள வாணியம்பாளையம் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயல்வெளியில் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிருஷ்டவசமாக தப்பினா்.

விபத்து குறித்து தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், மாற்றுப் பேருந்து நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு, பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா்.

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து

வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ... மேலும் பார்க்க

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா்: அமைச்சா் க.பொன்முடி

உயா் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனா் என்று வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தல்

ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு வலியுறுத்தியது. விழுப்புரத்தில் இந்தக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவி (எ) பெரியசாமியின் மனைவி கீதா (48). இவா், சென்... மேலும் பார்க்க

தீ விபத்தில் விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தீ விபத்தில் காயமடைந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வி.பாஞ்சாலம் புதுகாலனியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஆறுமுகம் (47). விவசாயக் கூ... மேலும் பார்க்க

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம், மாா்ச் 1: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் மீதான நான்கு அவதூறு வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிம... மேலும் பார்க்க