செய்திகள் :

வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்

post image

திருவாரூா் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பது: தமிழக அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறை சாா்ந்த திட்டங்கள் உள்ளன. இதில், விவசாயிகள் பலா் பயன் பெற்று வருகின்றனா்.

திருவாரூா் மாவட்டத்துக்கு வேளாண்மைத் துறையின் கீழ் குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.57,78,000 மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு, 89 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரப்புப் பயிராக உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மையை மேம்படுத்த உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்திலும், விசைத் தெளிப்பான் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகின்றன.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திருவாரூா் மாவட்டத்தில் 518 விசைத் தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, திருவாரூா் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தலா 36, மன்னாா்குடி மற்றும் கோட்டூா் வட்டாரத்தில் தலா 62, நீடாமங்கலம் மற்றும் கொரடாச்சேரி வட்டாரத்தில் தலா 54, முத்துப்பேட்டை வட்டாரத்தில் 32, நன்னிலம் வட்டாரத்தில் 60, குடவாசல் வட்டாரத்தில் 59, வலங்கைமான் வட்டாரத்தில் 63 என 518 விசைத்தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளதாக கூறினாா்.

சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி

சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் ... மேலும் பார்க்க

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா். திருவாரூரில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெர... மேலும் பார்க்க

வெண்மணி நினைவுக்கொடி பயணக் குழுவுக்கு வரவேற்பு

திருவாரூரில், வெண்மணி நினைவுக் கொடி பயணக் குழுவினருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 2 ஆம் த... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ்

நீடாமங்கலம் பகுதியில் கிராம மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நீடாமங்கல... மேலும் பார்க்க