செய்திகள் :

வரலாற்று வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதென்ன?

post image

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக விளையாடிய கேகேஆர் 15.1 ஓவா்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் குறைவான ரன்கள் அடித்தும் அதைக் கட்டுப்படுத்தி வென்ற முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர சஹால், மாா்கோ யான்சென் கொல்கத்தா பேட்டிங் வரிசையை நொறுக்கினார்கள்.

இந்த நம்பமுடியாத வரலாற்று வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வெற்றி

இந்த வெற்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது கடினம். எனது உள்ளுணர்வை நம்பினேன். பந்து லேசாக திரும்பியதும் சஹாலை அழைத்தேன். முடிந்த அளவுக்கு அவரது சுவாசத்தைக் கட்டுப்படுத்தினேன்.

சரியான இடத்தில் சரியான வீரர்களை வைத்து எதிர்க்க வேண்டுமென நினைத்தேன். இதைப் பற்றி பேசுவது கடினமானது. இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நான் இரண்டு பந்துகளில் ஆட்டமிழந்தேன். ஒன்று கீழாக வந்தது. மற்றொன்று பேட்டின் அடியில் பட்டது. ஸ்வீப் ஷாட் அடிக்க வீரர்களுக்கு கடினமாக இருந்தது. பிட்ச்சில் சீரற்ற பௌன்சர்கள் இருந்தன.

16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதைப் பார்த்தால் நாங்கள் போதிய அளவுக்கு ரன்களை அடித்திருக்கிறோம் போலிருக்கிறது.

சஹால் பந்துவீசும்போது பிறந்த நம்பிக்கை

பௌன்சர்கள் சீரற்று இருப்பதால் அதை பந்துவீச்சாளர்களிடம் நினைவில் வைக்கும்படி கூறினேன். அவர்களும் அதைச் செய்தார்கள். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எங்களுக்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

சஹால் வீசிய பந்து திரும்பியதும் எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்தன.

பேட்டர்களுக்கு நேராக அதிரடியான ஃபீல்டிங்கை அமைத்தேன். அவர்களும் அதற்கேற்ப தவறு செய்ததால் விக்கெட்டுகள் கிடைத்தன. இந்த வெற்றியும் நாங்கள் தன்னடக்கமாக இருக்க விரும்புகிறோம்.

இந்தப் போட்டியில் இருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொள்கிறோம். அதை அடுத்த போட்டியில் முதல் பந்தில் இருந்தே செயல்படுத்துவோம் என்றார்.

சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க

பஞ்சாபுடன் பலப்பரீட்சை: பெங்களூரில் ஆர்சிபி வெல்லுமா?

சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்வியுறும் ஆர்சிபிக்கு இன்று (ஏப்.18) பெங்களூரில் கடும் சவால் காத்திருக்கிறது.நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் தேர்வானார். இவரது தலைமையில் மு... மேலும் பார்க்க

விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியைந்த சம்பவம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 16... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் இணையும் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் ... மேலும் பார்க்க

அதிக டாட் பந்துகள்: எதிரணிகளைத் திணறடிக்கும் கலீல் அகமது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7... மேலும் பார்க்க

க்ளென் பிலிப்ஸுக்கு மாற்றாக இலங்கை வீரர்!

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸ் காயத்தினால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷானகா தேர்வாகியுள்ளார்.சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் த... மேலும் பார்க்க