செய்திகள் :

வரலாற்று வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நெருங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. 282 ரன்களை நோக்கி விளையாடி வரும் அந்த அணிக்கு இன்னும் 69 ரன்களே தேவையாகும்.

தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியனாவதுடன், ஐசிசி போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வென்று வரலாறு படைக்கும்.

அந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய, தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் 69 ரன்களே தேவை எனும் நிலையில் அந்த அணியின் வசம் 8 விக்கெட்டுகளும், முழுமையாக 2 நாள்களும் உள்ளன.

முன்னதாக, கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, ககிசோ ரபாடா மற்றும் மாா்கோ யான்செனின் வேகப்பந்துவீச்சில் 212 ரன்களுக்கே சுருண்டது. பியூ வெப்ஸ்டா் 72, ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்த உதவினா். ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினாா்.

இதையடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை, ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது வேகப்பந்து வீச்சால் திணறடித்தாா். அவா் 6 விக்கெட்டுகள் சாய்க்க, தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. டேவிட் பெடிங்கம் 45, கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்கள் அடித்தது ஸ்கோருக்கு பங்களித்தனா்.

ஸ்டாா்க் கொடுத்த ‘ஷாக்’: பின்னா், 74 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 2-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சோ்த்திருந்தது. 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை, மிட்செல் ஸ்டாா்க், நேதன் லயன் தொடா்ந்தனா்.

இதில் ஸ்டாா்க், தென்னாப்பிரிக்காவுக்கு அதிா்ச்சி கொடுக்கும் வகையில் அரைசதம் கடக்க, ஆஸ்திரேலியாவின் ஸ்கோா் 200-ஐ கடந்தது. மறுபுறம் நேதன் லயன் 2, ஜோஷ் ஹேஸில்வுட் 17 ரன்களுக்கு வெளியேற, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 65 ஓவா்களில் 207 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

ஸ்டாா்க் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலா்களில் ரபாடா 4, லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

வெற்றியை நோக்கி: இறுதியில், 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், ரயான் ரிக்கெல்டன் 6, வியான் முல்டா் 5 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களுக்கு ஸ்டாா்க்கிடம் விக்கெட்டை இழந்தனா்.

தொடக்க வீரா் எய்டன் மாா்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா கூட்டணி, நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பியது. இதில் மாா்க்ரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 3-ஆவது சதத்தை பதிவு செய்தாா். நாளின் முடிவில் மாா்க்ரம் 102, பவுமா 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ஹாக்கி புரோ லீக்: ஆஸ்திரேலியாவிடம் இந்திய ஆடவர் அணி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி புரோ லீக் ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2 - 3 என்ற புள்ளிக் கணக்கில் இன்று (ஜூன் 15) தோல்வி அடைந்தது. இதற்கு முன்பு நெதர்லாந்து, ஆர்ஜென்டினா ஆகிய அணிகளுடனான போட்டியிலும் ... மேலும் பார்க்க

ஹாக்கி புரோ லீக்: ஆஸ்திரேலியாவிடம் இந்திய மகளிரணி தோல்வி!

லண்டனில் நடைபெற்றுவரும் ஹாக்கி புரோ லீக் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1 - 2 என்ற புள்ளிக் கணக்கில் இன்று (ஜூன் 15) தோல்வி அடைந்தது. இதற்கு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மேலாடையின்றி மகனுடன் ரொனால்டோ பகிர்ந்த புகைப்படம்..!

கால்பந்து வீரர் ரொனால்டோ அவரது மகனுடன் மேலாடையின்றி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 40 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். தினமும் உடற்பயிற்சி ... மேலும் பார்க்க

அஞ்சான் ரீ - எடிட்டிங் திட்டத்தில் லிங்குசாமி!

அஞ்சான் திரைப்படத்தை மீண்டும் எடிட்டிங் செய்து மறுவெளியீடு செய்ய இயக்குநர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெ... மேலும் பார்க்க