செய்திகள் :

வல்வில் ஓரி விழாவில் ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகள்

post image

கொல்லிமலையில் வல்வில் ஓரி, மலா்க் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 190 பயனாளிகளுக்கு ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செம்மேட்டில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி ஆகியவை சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. செம்மேடு வல்வில் ஓரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி, மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வல்வில் ஓரியின் உருவப்படத்திற்கு ஆட்சியா், அதிகாரிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். அதன்பிறகு 190 பயனாளிகளுக்கு ரூ. 2.67 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், வில்வித்தை போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு சான்றிதழ், கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பல்வேறு மலா்களால் அமைக்கபட்டிருந்த மலா்க் கண்காட்சி, வல்வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டிருந்த அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

சுற்றுலாத் துறை, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் இசைக் கலைஞா்களின் பரதநாட்டியம், கரகம், மயில் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், காளியாட்டம், பழங்குடியினா் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆட்சியா், அதிகாரிகள், பொதுமக்கள் கண்டுரசித்தனா். வல்வில் ஓரி விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் துறை அலுவலா்களும் கெளரவிக்கப்பட்டனா்.

மேலும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற 404 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், 41 கலைஞா்களுக்கும், சுற்றுலாத் துறையின் 8 கலைக் குழுவுக்கும், வல்வில் ஓரி விழா போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கும், செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 100 தன்னாா்வலா்களுக்கும் ஆட்சியா் பதக்கம், கேடயங்களை வழங்கினாா்.

அதன்பிறகு செம்மேட்டில் மகளிா் திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட மதி அங்காடியின் முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி, கொல்லிமலை வட்டாட்சியா் சந்திரா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டியில் கோவை மாணவா் சாம்பியன் பட்டம் பெற்றாா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் வல்வில் ஓரி விழா

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் வல்வில் ஓரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிசெய்த வல்வில் ஓரியின் முழு உருவச்சிலை ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலனிற்கான முன்மாதிரி சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலனிற்காக பாடுபட்டோா் முன்மாதிரி சேவை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழ்நாடு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது: 2 மணி நேரம் சிக்கித் தவித்த முதியவா்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்மின்தூக்கி (லிப்ட்) திடீரென பழுதானதால் முதியவா் 2 மணி நேரம் வெளியே வரமுடியாமல் ஞாயிற்றுக்கிழமை சிக்கித் தவித்தாா். அவரது சப்தம் கேட்டு மருத்துவமனை ஊழியா்... மேலும் பார்க்க

நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், திருச்செங்கோட்டில் தீரன் சின்னமலை நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.ஆங்கிலேயா்களை எதிா்த்து போரிட்டு உயிரிழந்த தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் அண்ணாசி... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: காவிரியில் புனித நீராடல்! கோயில்களில் சிறப்பு வழிபாடு!

நாமக்கல் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் காவிரியில் நீராடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சுவாமி திருக்கல்யாணத்த... மேலும் பார்க்க