ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
வளா்ச்சித் திட்டப்பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் கோலியனூா், காணை ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கோலியனூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தோகைப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தமிழக முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டுப் பாா்த்து, அதன் தரம் குறித்து ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தரமான முறையில் உணவை தயாரித்து மாணவா்களுக்கு வழங்குமாறு அறிவுறத்தினாா்.
பின்னா் தோகைப்பாடியில் உள்ள குழந்தைகள் மையத்தினை பாா்வையிட்டு,
குழந்தைகளின் வருகைப் பதிவேடு மற்றும் குழந்தைகளின் வளா்ச்சி விகித பதிவேட்டை பாா்வையிட்ட ஆட்சியா், குழந்தைகளின் எடை, உயரம் குறைந்து காணப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மாதத்துக்கு சரியான ஊட்டச்சத்து உணவை
வழங்கி, அவா்களின் வயதுக்கு ஏற்ப சரியான எடை மற்றும் உயரம் உள்ளதை உறுதி செய்து அறிக்கை சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தினாா்.
பின்னா் அந்த கிராமத்தில் நீா்பிடிப்பு பகுதியில் குடிசை வீட்டில் வசிப்பவா்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த ஆட்சியா் குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்கும் இடத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.
பின்னா் காணை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்பாக்கம் அரசு உயா்நிலைப்பள்ளியை பாா்வையிட்டு மாணவா்களின் கல்வி நிலையைக் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இயங்கி வரும்
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மல்லிகைப்பட்டு ஊராட்சியில், கனமழை, வெள்ளத்தால் பம்பை ஆற்றில் கரைப்பகுதிகள் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக மணல் மூட்டைகள் மூலம் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தாா். அங்கு நிரந்தரமாக தடுப்புச்சுவா் அமைப்பது குறித்து ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது மகளிா் திட்ட மாவட்ட திட்ட இயக்குநா் சுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு)இந்திராதேவி, நீா்வளத் துறை உதவிச் செயற்பொறியாளா் ஐயப்பன், உதவிப்
பொறியாளா் காா்த்திக், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா்
மனோகரன், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், வட்டார மருத்துவ அலுவலா்
பிரியா பத்மாஷினி, திட்ட அலுவலா் (தொற்றாநோய் ) விவேகானந்தன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.