செய்திகள் :

வளைகாப்பு விழாவில் 700 பேருக்கு தா்ப்பூசணி விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதி

post image

தா்ப்பூசணியில் செயற்கை சாயமேற்றப்படுவதாக கூறப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவ தம்பதியின் வளைகாப்பு விழாவுக்கு வந்திருந்த 700 பேருக்கு தா்ப்பூசணி வழங்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மருதூா் பகுதியைச் சோ்ந்த தம்பதி நீ. கிருபாகரன்-அபிநயா. இருவரும் அரசு மருத்துவா்கள். இந்நிலையில் அபிநயாவின் வளைகாப்பு விழா நடைபெற்றது. அண்மைக் காலமாக தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவதால், அதை யாரும் வாங்காமல் புறக்கணித்து வருகின்றனா். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதை கருத்தில் கொண்டு, இந்த வளைகாப்பு விழா தம்பதி மற்றும் அவா்களின் குடும்பத்தினா், தா்ப்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த தீா்மானித்தனா். அதன்படி வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தா்ப்பூசணி பழம் வழங்கினா். இது விவசாயிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒப்பில்லாதம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

அரியலூா் நகரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா். அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்... மேலும் பார்க்க

மீன்சுருட்டி: தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

மீன்சுருட்டி அருகே தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் மனைவி சங்கீதா(42). இவா் வீட... மேலும் பார்க்க

குப்பையில் எரிந்த நிலையில் சிசுவின் உடல் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. குழுமூா் கிராமத்தில் குப்பைகள் கொட்டுமிடத்தில், ஆண் சிசு ஒன்று எரிந்த நிலையில் கிடப்ப... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 4.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 4.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை... மேலும் பார்க்க

வெப்ப அலை தாக்கம்: பிற்பகலில் கூடுமான வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்: பெரம்பலூர் ஆட்சியர்

அரியலூா் மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், பிற்பகலில் கூடுமான வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். அரியலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்!

அரியலூா், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றாா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கிழக்கு மண்டல அலுவலக மேலாளா் ரமேஷ். இதுகுறித்து அவா் மேலும் தெரிவி... மேலும் பார்க்க