தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? - அண்ணாமலை
வள்ளலாா் நினைவு தினம்: பிப். 11இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை
வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் 11-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் வரும் 11-ஆம் தேதி மூடப்படும்.