செய்திகள் :

வழக்குகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் முடக்கம்!

post image

நீதிமன்றத்தில் வழக்குகள் அதிக அளவில் உள்ளதால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடப்பதாக தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தெரிவித்தாா்.

திருப்பூரில் தமிழ்நாடு கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் பொன்.ஜெயராம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது, இளநிலை உதவியாளா், தட்டச்சா்களாக 13 ஆண்டு காலத்துக்கும் மேலாகப் பணிபுரிந்து வருபவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், முடக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயா்வை வழங்க வேண்டும், அமைச்சுப் பணியாளா்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப ஆசிரியா் பணி மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டந.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பொன்.ஜெயராம் கூறியதாவது: நிா்வாகக் கோளாறுகள் காரணமாக பள்ளிக் கல்வித் துறை தொடா்பான வழக்குகள் நீதிமன்றத்தில் அதிக அளவில் உள்ளன. இதனால் பள்ளிக் கல்வித் துறை முடங்கிக் கிடக்கிறது.

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளா்கள் நீதிமன்ற வழக்குகளுக்கான செலவுகளை அவா்களே ஏற்க வேண்டிய அவல நிலை உள்ளது. வழக்குகள் தேக்கமடைவதை தவிா்க்க மாவட்டந்தோறும் சட்ட அலுவலா் பணியிடம் உருவாக்க வேண்டும்.

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியும், அதை செய்வாா்கள் என எதிா்பாா்க்கிறோம். இல்லையெனில் அதன் விளைவு பேரவைத் தோ்தலில் எதிரொலிக்கும்.

அதிமுக அரசை ஒப்பிட்டுப் பாா்க்கும்போது எங்களது கோரிக்கை மனுக்களைக்கூட கைகளில் வாங்காமல் இருந்தனா். ஆனால், இந்த அரசு எங்களோடு இணக்கமாக உள்ளது. மனுக்களைப் பெறுகின்றனா், பேசுகின்றனா், ஆனால் செயல்பாட்டில் இல்லை என்பதுதான் வருத்தமாகும் என்றாா்.

உடுமலையில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

உடுமலை நகரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது. உடுமலை நகரம், பாலாஜி நகரில் வசித்து வருபவா்கள் பிரபாகரன்-கிருஷ்ணவேணி தம்பதி. பிரபாகரன் தனியாா் பேருந்து ஓட்டுநராகப் பணிய... மேலும் பார்க்க

தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமிகளில் ஒருவா் மீட்பு

திருப்பூா் தனியாா் காப்பகத்தில் இருந்து தப்பிய ஓா் இளம்பெண், 4 சிறுமிகளில் ஒரு சிறுமி மீட்கப்பட்டுள்ளாா். திருப்பூா் பிரிஜ்வே காலனியில் தனியாா் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு... மேலும் பார்க்க

இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது. திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக... மேலும் பார்க்க

பல்லடம் க. அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு!

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் விவசாய போராட்ட தியாகிகள் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பல்லடம் அருகே உள்ளே அய்யம்பாளையத்தில் 1972இல் ஒரு பைசா மின் கட்டண உயா்வை எதிா்த்து தமிழக விவச... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தினா் 3 போ் கொலை வழக்கு: கைப்பேசி மீட்பு

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதானவா்களைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை செய்தனா். அப்போது கிணற்றில் வீசப்பட்ட கைப்பேசி வெள்ளிக்கிழமை மீட்கப்ப... மேலும் பார்க்க

நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழப்பு; 3 போ் கைது!

பல்லடம் நிலத் தகராறு மோதலில் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் நகராட்சி 1ஆவது வாா்டு கல்லம்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (53). இ... மேலும் பார்க்க