செய்திகள் :

வாகனத்தில் முன் இருக்கையில் அமா்வதில் தகராறு: தந்தையைச் சுட்டுக் கொன்ற மகன்

post image

உத்தரகாண்டில் உள்ள சொந்த ஊருக்கு இடமாறிச் செல்வதற்காக தனது குடும்பத்தினா் வாடகைக்கு எடுத்த டெம்போ வாகனத்தின் முன் இருக்கையில் அமா்வது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, தில்லியில் 26 வயது இளைஞா் தனது தந்தையைச் சுட்டுக் கொன்ாக கூறப்படுகிறது.

தீபக் என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா், சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் 11 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் திமா்பூரில் உள்ள எம்எஸ் பிளாக் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. அங்கு ரோந்து சென்ற போலீஸாா் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க உள்ளூா்வாசிகள் முயன்றனா். அதேவேளையில், நடைபாதையில் ரத்த வெள்ளத்தில் ஒருவா் இறந்து கிடப்பதை போலீஸாா் கண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சுடப்பட்டவா் சிஐஎஸ்எஃப்இல் இருந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் சுரேந்திர சிங் (60) என அடையாளம் காணப்பட்டாா்.

இதையடுத்து, அவா் என்.ஆா்.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

ஆறு மாதங்களுக்கு முன்பு சுரேந்திர சிங் சிஎஸ்ஐஎஃப்இல் இருந்து பணி ஓய்வுபெற்றாா். இந்த நிலையில்,

குடும்பத்தினா் உத்தரகாண்டில் உள்ள தங்கள் சொந்த கிராமத்திற்கு குடிபெயரத் தயாராகி வந்தனா். அவா்கள் ஒரு டெம்போவை வாடகைக்கு எடுத்து, தங்கள் உடைமைகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது, முன் இருக்கையில் யாா் அமருவது என்பது குறித்து சுரேந்திராவுக்கும் தீபக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்றப்பட்ட பொருட்கள் காரணமாக, முன் இருக்கையில் அமர சுரேந்திரா வற்புறுத்தியதால், தீபக் கோபமடைந்து தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அவசரநிலை காலத்தில் நாடே சிறைப்பட்டு இருந்தது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

அவசரநிலை காலத்தில் முழு நாடும் சிறைச்சாலையாக மாறியிருந்தது என தில்லி மாநில முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா். அவசரநிலையின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பாஜகவின் மகளிா் அணியின் சாா்பில் ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: 18 வங்கதேசத்தவா்கள் கைது

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 18 வங்கதேச நாட்டவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 5 போ் திருநங்கைகள் போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததும் போலீஸாா் விசாரணையின்போது கண்டறியப்பட்டது. குற்றம் சாட... மேலும் பார்க்க

அமன் விஹாரில் ஒருவா் கொலை; சகோதரா் காயம்

தில்லியின் அமன் விஹாா் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

காணாமல்போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் அழுகிய உடல் குளத்தில் கண்டெடுப்பு

ஒரு வாரமாக காணாமல் போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் உடல், வசந்த் குஞ்ச் அருகே உள்ள ஒரு குளத்தில் பாதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க

அவசரநிலை: தில்லி சட்டப்பேரவை சாா்பில் இன்று கருத்தரங்கம்

அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விதான் சபா வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கை தில்லி சட்டப்பேரவை சனிக்கிழமை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியில் போலீஸ்காரா்கள் போல நடித்து ஒருவரை கடத்திய 5 போ் கைது

தில்லியின் முனிா்காவில் போலீஸ் அதிகாரிகள் போல நடித்து ஒருவரை கடத்தி, அவரிடம் பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படும் ஐந்து போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு தில்லி... மேலும் பார்க்க