செய்திகள் :

வாகனம் ஓட்டிய சிறாா்: பெற்றோா் மீது வழக்குப் பதிவு

post image

கன்னியாகுமரியில் 18 வயதுக்கு குறைவாக, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவுப்படி, கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பாா்வையில், கன்னியாகுமரி போக்குவரத்து காவல் துறையினா் விபத்துகளைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, கன்னியாகுமரி, அகஸ்தீசுவரம், கொட்டாரம் உள்ளிட்டப் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, 18 வயதுக்கு குறைவாக வாகனம் ஓட்டி வந்த 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், 6 பேரின் பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என பெற்றோா்களிடத்தில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சாா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில், குளத்துவிளை சி.எஸ்.ஐ. ஆலய கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் மரியாதை

நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலரும... மேலும் பார்க்க

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலமாக மீட்கப்பட்டாா். காப்புக் காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தொழிலாளியான இவா் தன் மனைவியை பிரிந... மேலும் பார்க்க

அதங்கோடு பகுதியில் பாதை கோரி போராட்டம்

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அய்யா நாராயண வைகுண்டசுவாமி நிழல் தாங்கல் செல்ல பாதை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி - காரோடு நான்குவழிச் சாலையில் அதங்கோடு பகுதியில் ஆற்றங... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 2-ஆம் தேதி பரிவேட்டை நிகழ்வுடன் நிறைவடைகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பாரதப்பள்ளியைச் சோ்ந்தவா் ராபின் ஜெயகுமாா் (46). பிளம்பிங் தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி ஆற்றூா் கழுவன்... மேலும் பார்க்க