செய்திகள் :

வாகன சோதனை: பைக்கில் இருந்து தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி!

post image

கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற நிலையில், போக்குவரத்து காவலர் வாகனத்தை நிறுத்தச் சொல்லியதால் பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை லாரி மோதியதில் பலியானார்.

இந்த விபத்துக்கு போக்குவரத்து காவலர்தான் காரணம் என்று கூறி ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 3 துணை உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மத்தூர் தாலுகாவில் உள்ள கோரவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த வானிஸ்ரீ - அசோக் தம்பதியினரின் ஒரே மகள் ஹிருத்திக்‌ஷா. நேற்று முன்நாள் ஹிருத்திக்‌ஷா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. சிறுமியை வானிஸ்ரீ மற்றும் அவரது மைத்துனர் பாஸ்கர் கெளடா ஆகியோர் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் சிறுமிக்கு முதலுதவி அளித்தனர்.

மேலும், மத்தூரில் சிறுமிக்கு செலுத்த வேண்டிய ரேபிஸ் தடுப்பூசி இல்லாததால் மண்டியாவில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

இந்த நிலையில், இன்று(மே 27) காலை 10.30 மணியளவில் மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில் பாஸ்கர் கெளடா தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஹிருத்திக்‌ஷா, அவரது தாயார் மற்றும் அவரது மாமாவை போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். மருத்துவக் காரணத்தை வானிஸ்ரீ கூறிய பிறகு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மீண்டும் அவர்களை சில மீட்டர்களில் மற்றொரு போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்திய நிலையில், குழப்பத்தில் பாஸ்கர் கெளடா வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, வண்டியின் இடதுபுறம் விழுந்தார், வாணிஸ்ரீ, ஹிருத்திக்‌ஷா வலது புறத்தில் விழ எதிரே வந்த லாரி மோதியது.

லாரி மோதியதில் சிறுமிகு தலையில் பலந்த காயம் ஏற்பட்டு சிறுமி பலியானார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

உயிரிழந்த ஹிருத்திக்‌ஷாவின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் சிறுமியின் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலர் மீது உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மண்டியா காவல் துறை கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன பாலதண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றார். தொடர்ந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ஜெயராம், நாகராஜ், குருதேவ் ஆகிய மூவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: 73 ஆண்டு கால தடை.. மது விலக்கை நீக்குகிறதா சவூதி அரேபியா?

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க