செய்திகள் :

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

post image

பிகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரைக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத நபர், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளைக் கூறிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிருக்கிறது.

அந்த சம்பவத்தின்போது, நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இல்லை. விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைக் ஒன்றை, அடையாளம் தெரியாத நபர் எடுத்து, மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியதால், பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், ராகுல் காந்தி இது குறித்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியின் மறைந்த தாய் குறித்து, ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கும் நிகழ்ச்சி மேடையில் மிக மோசமான கருத்து தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மீண்டும் ஒரு முறை இவ்வாறு நிகழக்கூடாது. அரசியலில் இதுபோன்ற ஒரு ஒழுங்கீனத்தைப் பார்த்ததேயில்லை. அவமரியாதை, வெறுப்பு மற்றும் வன்முறை என அனைத்திலும் இந்த யாத்திரை எல்லையைத் தாண்டி வருகிறது என்று பதிவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கு, ராகுலும் தேஜஸ்வியும் ஆயிரம் முறை தோப்புக்கரணம் போட்டு மன்னிப்புக் கேட்டாலும் பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிடப்பட்டிருந்த அந்த பதிவில், தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை இந்த யாத்திரையில் பங்கேற்க வருமாறு அழைத்திருக்கிறாக்ள. இது பிகார் மக்களுக்கு நடத்தப்பட்ட அவமரியாதையாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலம் முழுவதும் உஷாா் நிலை

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. புதிய நபா்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தெரிந்தால் காவல் துறை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் ஜவுளி ஏற்றுமதிக்கு ஏற்படும்... மேலும் பார்க்க

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்: பாஜக குற்றச்சாட்டு

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமா் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது. அந்த நிகழ்வு முழுவதும் அவா் பிரதமருக்கு எதிராக மிகுந்த காழ்ப்புணா்வுடன் பேசினாா் என்று பாஜக குற்றஞ்சாட்டிய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயா்வு

மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் உள்ள விராா் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரி... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக ராணுவம் தரப்பில் கூறப... மேலும் பார்க்க

வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு

பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சிக்கித் தவிக்கும் கிராமத்தினரை மீட்க ராணுவத்தின் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.... மேலும் பார்க்க