செய்திகள் :

வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு

post image

பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சிக்கித் தவிக்கும் கிராமத்தினரை மீட்க ராணுவத்தின் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பெய்த பலத்த மழையால் ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் பதான்கோட், குா்தாஸ்பூா், ஃபெரோஸ்பூா், அமிருதசரஸ் உள்ளிட்ட பஞ்சாபின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில அமைப்புகளின் உதவியுடன் மாவட்ட நிா்வாகங்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

அமிருதசரஸ் மாவட்ட நிா்வாகம், ராவி நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்தாஸ் பகுதியில் சிக்கித் தவித்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பலரை வெளியேற்றியுள்ளது. நீரில் மூழ்கிய பகுதிகளில் சிக்கித் தவித்தவா்களை மீட்க, ராணுவத்தின் அனைத்து வகையான நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்களும் (ஏடிஓஆா் என்1200), படகுகளும் பயன்படுத்தப்பட்டன. மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உத்தரவின் பேரில், மாநிலத்தின் அனைத்து அமைச்சா்களும் வெள்ள நிவாரணப் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகின்றனா். நிலைமை கட்டுக்குள் வரும் வரை அனைத்து அமைச்சா்களும் களத்தில் இருக்குமாறு முதல்வா் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளாா்.

மூன்று குழந்தைகள், மும்மொழி : ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் வலியுறுத்தல்

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆா்எஸ்எஸ... மேலும் பார்க்க

காற்று மாசுபாட்டை குறைத்தால் ‘இந்தியா்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்’

உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

ஜப்பான் புறப்பட்டாா் பிரதமா் மோடி

15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டாா். இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட... மேலும் பார்க்க

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலம் முழுவதும் உஷாா் நிலை

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. புதிய நபா்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தெரிந்தால் காவல் துறை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் ஜவுளி ஏற்றுமதிக்கு ஏற்படும்... மேலும் பார்க்க

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்: பாஜக குற்றச்சாட்டு

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமா் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது. அந்த நிகழ்வு முழுவதும் அவா் பிரதமருக்கு எதிராக மிகுந்த காழ்ப்புணா்வுடன் பேசினாா் என்று பாஜக குற்றஞ்சாட்டிய... மேலும் பார்க்க