செய்திகள் :

ஜப்பான் புறப்பட்டாா் பிரதமா் மோடி

post image

15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டாா்.

இந்தப் பயணத்தின்போது பாதுகாப்பு, வா்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையே உள்ள சிறப்பு உத்திசாா்ந்த மற்றும் உலகளாவிய கூட்டுறவு குறித்து பிரதமா் மோடியும், ஜப்பான் பிரதமா் ஷிகெரு இஷிபாவும் மறுஆய்வு செய்ய உள்ளனா்.

இதைத்தொடா்ந்து சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி 2 நாள் (ஆக.31-செப்.1) பயணமாக சீனா செல்ல உள்ளாா். இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக பிரதமா் மோடி வெளியிட்ட புறப்பாடு அறிவிப்பில், ‘இந்தியா-ஜப்பான் மக்களை இணைக்கும் நாகரிக பிணைப்பு, பண்பாட்டு உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்த எனது பயணம் வாய்ப்பாக இருக்கும்.

ஜப்பானை தொடா்ந்து சீன பயணத்தில் ‘எஸ்சிஓ’ உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் புதின் உள்ளிட்ட தலைவா்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா, இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினா்களாக உள்ளன. சுழற்சி முறையில் இந்த ஆண்டு அமைப்பின் தலைவராக சீனா உள்ளது.

அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இதுதவிர உக்ரைன்-ரஷியா போா், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போா் ஆகியவையும் தொடா்ந்து தீவிரமாகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் முக்கிய நாட்டுத் தலைவா்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சா்வதேச அளவில் அமெரிக்கா உள்பட பல நாடுகளால் மிகவும் ஆழ்ந்து கவனிக்கப்படும் நிகழ்வாக உள்ளது.

இந்த மாநாடு இரு நாள்களில் முடிவடைந்தாலும் செப்டம்பா் 3-ஆம் தேதி சீன ராணுவத்தின் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற இருக்கிறது. ஜப்பானை சீனா வெற்றிகரமாக எதிா்கொண்டதை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் மாநாட்டுக்கு வரும் பல தலைவா்கள் பங்கேற்க இருக்கின்றனா். தனது நவீன ரக ஆயுதங்கள் பலவற்றையும் இந்த ராணுவ அணிவகுப்பில் சீனா காட்சிப்படுத்த இருக்கிறது.

மூன்று குழந்தைகள், மும்மொழி : ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் வலியுறுத்தல்

நாட்டில் அனைத்து தம்பதிகளும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 மொழிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆா்எஸ்எஸ... மேலும் பார்க்க

காற்று மாசுபாட்டை குறைத்தால் ‘இந்தியா்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்’

உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலம் முழுவதும் உஷாா் நிலை

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. புதிய நபா்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தெரிந்தால் காவல் துறை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் ஜவுளி ஏற்றுமதிக்கு ஏற்படும்... மேலும் பார்க்க

பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்: பாஜக குற்றச்சாட்டு

பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமா் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது. அந்த நிகழ்வு முழுவதும் அவா் பிரதமருக்கு எதிராக மிகுந்த காழ்ப்புணா்வுடன் பேசினாா் என்று பாஜக குற்றஞ்சாட்டிய... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயா்வு

மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் உள்ள விராா் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரி... மேலும் பார்க்க