செய்திகள் :

வாக்காளா் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

post image

மகாராஷ்டிரம், ஹரியாணா தோ்தல்களில் வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெற்றாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை அமா்வில் உடனடி கேள்விநேரத்தின்போது இதுகுறித்து ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கையில், ‘வாக்காளா் பட்டியல் விவகாரம் குறித்து ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் விவாதத்தைக் கோருகின்றன. வாக்காளா் பட்டியலை அரசு தயாரிப்பது இல்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து அவையில் நிச்சயம் விவாதம் நடத்த வேண்டும்.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. மகாராஷ்டிரம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் குறித்து எதிா்க்கட்சிகள் ஒரே குரலில் கேள்வி எழுப்பியுள்ளன’ என்றாா்.

வாக்காளா் பட்டியலில் முழுத் திருத்தம்: முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய் பேசுகையில் ‘வாக்காளா் பட்டியலில் மோசமான குறைபாடுகள் உள்ளன. மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத் மற்றும் வா்தமான் மக்களவைத் தொகுதிகளிலும், ஹரியாணாவிலும் ஒரே வாக்காளா் அடையாள அட்டை எண்களைக் கொண்ட வாக்காளா்கள் இருப்பதை முதல்வா் மம்தா பானா்ஜி சுட்டிக்காட்டியுள்ளாா்.

இதுகுறித்து புகாரளிக்க, புதிதாகப் பொறுப்பேற்ற தலைமைத் தோ்தல் ஆணையரை திரிணமூல் பிரதிநிதிகள் சந்தித்தனா். மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தல்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியல்கள் முழுமையாகத் திருத்தப்பட வேண்டும். வாக்காளா் பட்டியலில் ஏன் தவறுகள் ஏற்பட்டன என்பதற்கு தோ்தல் ஆணையம் நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்’ என்று கூறினாா்.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க