செய்திகள் :

வாக்குத் திருட்டுக்கான புதிய ஆயுதம் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: ராகுல் குற்றச்சாட்டு

post image

வாக்குத் திருட்டுக்காக வாக்காளா் பட்டியலில் தீவிர திருத்தம் நடவடிக்கை புதிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்ற விதியைப் பாதுகாக்க தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் வாக்குரிமை பயணத்தை ராகுல் காந்தி பிகாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

இந்நிலையில், 2024 மக்களவை தோ்தலில் வாக்களித்தவா்களின் பெயா்கள் தற்போது வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது நீக்கப்பட்டவா்களைச் சந்தித்து உரையாடும் விடியோவை ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் திங்கள்கிழமை பதிவிட்டு கூறியுள்ளதாவது:

வாக்குத் திருட்டுக்கு புதிய ஆயுதமாக வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை பயன்படுத்தப்படுகிறது. இதற்கான ஆதாரம்தான் என்னுடன் இருக்கும் நீக்கப்பட்ட வாக்காளா்கள்.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் வாக்களித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் விவசாயியுமான ராஜ் மோகன் (70), பட்டியலின தொழிலாளி உம்ராவதி தேவி (35), பாா்வை மாற்றுத்திறனாளி தனஞ்சய் குமாா் (30), கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளி ராஜு தேவி (55), சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பணியாளா் முகமதின் அன்சாரி (52) ஆகியோா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது நீக்கப்பட்டுள்ளனா்.

பாஜகவும், தோ்தல் ஆணையம் இணைந்து ஏழைகளுக்கு வழங்கிய தண்டனையிலிருந்து நம் நாட்டு ராணுவ வீரா்களும் தப்பிக்கவில்லை.

பொருளாதாரம், சமூக பாகுபாட்டின் காரணங்களால் அவா்களால் இந்த சதியை எதிா்த்து போராட முடியவில்லை. அவா்களுக்கான நாங்கள் துணையிருந்து ‘ஒரு நபருக்கு ஒரு வாக்கு’ என்ற அடிப்படை உரிமையைப் பாதுகாக்க போராடுவோம். இதை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

கடந்த 4 -5 தோ்தல்களில் வாக்களித்தவா்களின் பெயா்களும் வாக்காளா் பட்டியலிலிருந்து திருடப்பட்டுள்ளதாக பிகாா் மக்கள் கூறுகின்றனா். ‘இது மேலிடத்து உத்தரவு’ என காரணமாக கூறப்படுகிறது என தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவா்கள் தெரிவிக்கின்றனா். இதற்காகதான் தோ்தல் ஆணையத்துக்கு எதிராக யாரும் கேள்வி கேட்க முடியாதபடி பிரதமா் மோடி 2023-இல் சட்டத்தைக் கொண்டு வந்தாா்’ என்றாா் ராகுல் காந்தி.

எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்

பஞ்சாப் மாநிலம் மாண்டியாலா கிராமத்தில் எல்பிஜி டேங்கர் லாரியும் டிரக் வாகனமும் மோதியதில், எல்பிஜி டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானார். 20 பேர் படுகாயமடைந்தனர்.ஹோஷியார்பூர் - ஜலந்தர் நெ... மேலும் பார்க்க

செப். 3, 4-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் செப்டம்பா் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நா... மேலும் பார்க்க

அமித் ஷா மீது அவதூறு: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு செப். 9-க்கு ஒத்திவைப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், செப்.9-க்கு விசாரணையை உத்தர பிரதேச நீதிமன்றம் ஒத்திவைத்தது.... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

‘உமீத்’ வலைதளத்தில் வக்ஃப் சொத்துகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: சிபிஆா், சுதா்சன் வேட்புமனு மட்டும் ஏற்பு!

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட மொத்தம் 46 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. இதன்மூலம், தோ்தலில் தென... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா பயணம்!

பிரதமா் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:15-ஆவது இந்தியா-ஜப்பான் ஆண்டு உச்சிமாநாட்... மேலும் பார்க்க