செய்திகள் :

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

post image

இந்தியாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்த சான்றுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்குத் திருட்டு நடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த ராகுல் காந்தி, இன்று அதனை வெளியிட்டுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:

”ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தலுக்கு கருத்து கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் வேறுபடுகின்றன. ஹரியாணா, மத்திய பிரதேசத்தில் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டன.

மகாராஷ்டிரத்தில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 மாதங்களில் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதும், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததும் எங்களுக்கு சந்தேகங்களை எழுப்பியது.

மக்களவையில் அமோக வெற்றி பெற்ற நாங்கள் சட்டப்பேரவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தோம். இரண்டு தேர்தலுக்கு மத்தியில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் வந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முறைகேடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் குற்றச்சாட்டு எழுப்பினோம். வாக்காளார் பட்டியல் என்பது நாட்டின் சொத்து. ஆனால், அந்த பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது. பின்னர், சுவாரஸ்யமான ஒன்றை தேர்தல் ஆணையம் செய்தது. வாக்குச் சாவடி சிசிடிவி காட்சிகளை அழிக்கப் போவதாக கூறினார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், மாலை 5 மணிக்கு மேல் வாக்கு சதவிகிதம் அதிகரித்த கேள்வி எங்கள் முன் இருந்தது. இந்த இரண்டு விஷயங்களும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதை உறுதியாக நம்ப வைத்தன.

தேர்தலில் எப்படி மோசடி நடைபெறுகிறது என்பதை ஆராய ஆய்வுக் குழு அமைத்தோம்.

மக்களவைத் தேர்தல் தரவுகளை ஆராய்ந்தோம். தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை தராததால் ஒரு மக்களவை தொகுதியில் உள்ள ஒரு சட்டப்பேரவை வாக்காளர்களை ஆராய 6 மாதங்கள் ஆகின.

கர்நாடகத்தில் ஆட்சி அமைத்த நாங்கள் மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தோம். எங்களுக்கு ஏமாற்றம் அளித்த மத்திய பெங்களூர் தொகுதியை ஆராய முடிவு செய்தோம். அதில், அனைத்து சட்டப்பேரவையிலும் வெற்றி பெற்ற நாங்கள் மகாதேவபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் கடும் சரிவைக் கண்டோம்.

மத்திய பெங்களூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் 6,58,915 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 6,26,208 வாக்குகள் பெற்றனர். வெற்றி வித்தியாசம் 32,707 வாக்குகள் மட்டுமே.

மகாதேவபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2.29 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2.29 லட்சம் வாக்குகள் பாஜகவும், 1.15 லட்சம் வாக்குகள் காங்கிரஸும் பெற்றிருந்தது. வித்தியாசம் மட்டும் 1.14 லட்சம்.

இந்த தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. 5 வகையில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது.” என்றார்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

அமெரிக்காவுடன் வா்த்தகப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ‘இந்தியா, தனது தேசிய-உத்திசாா் நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது; எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது’ என்று முன்னாள் குடியரசு துணைத் ... மேலும் பார்க்க

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பால் உலக அளவில் நிலவும் வா்த்தக நிச்சயமற்ற சூழலில் இருந்து உள்நாட்டுத் தொழில் துறையினரைப் பாதுகாக்க ரூ.2,250 கோடி மதிப்பீட்டில... மேலும் பார்க்க

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது... மேலும் பார்க்க

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா். சம்ஸ்கிருத பாரம்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா். சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ ... மேலும் பார்க்க