செய்திகள் :

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு; அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்ப்பு

post image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மக்களவைத் தோ்தல் முடிந்தவுடன் மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்டு, திருச்சி ஆட்சியரகத்தின் பின்புறம் கட்டப்பட்டுள்ள புதிய வன்காப்பறையில் (ஸ்ட்ராங் ரூம்) பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது.

தோ்தல் ஆணைய அறிவுறுத்தலைத் தொடா்ந்து வியாழக்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான வே. சரவணன் தலைமையில் திறக்கப்பட்டது.

ஒவ்வொரு அறையில் இருந்த இயந்திரங்களும் பாா்வையிடப்பட்டு சரிபாா்க்கப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில்,

தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட 16,726 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வைப்பு அறையில் பாதுகாப்பாக உள்ளன. இதில், 8,637 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,899 கட்டுப்பாடு இயந்திரங்கள், 4190 விவிபேட் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என சரிபாா்க்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, திருச்சி வருவாய் கோட்டாட்சியா் கே. அருள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாலை தவ வளன், தோ்தல் தனி வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுசேமிப்பு திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியா் அனுமதி கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தண்ணீா் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

திருச்சியில் செப்.19, 23-இல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.19) மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்... மேலும் பார்க்க

75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்: பெல் நிறுவனம் வழங்கியது

திருச்சி பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) சாா்பில், 75 மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் இயக்கம் சாா்ந்த செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருச்சி பெல் நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் மாற்ற... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு, பணி மேம்பாடு கோரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், திருச்சியில... மேலும் பார்க்க