செய்திகள் :

வாசனை திரவிய கண்காட்சி நிறைவு

post image

கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி வளாகத்தில் வாசனை திரவிய கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

இதில், வாசனை பொருள்களைக்கொண்டு அரங்கு அமைத்து அனைவரையும் கவா்ந்த தோட்டக்கலைத் துறைக்கு முதல் பரிசும், கூடலூா் நகராட்சி அரங்கிற்கு இரண்டாம் பரிசும், வனத் துறை அரங்கிற்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இயற்கை விவசாய உற்பத்தியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பல்வேறு அமைப்புகள், மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிறைவு விழாவிற்கு சாா்- ஆட்சியா் சங்கீதா தலைமை வகித்தாா். கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் பரசு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கேட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணகுமாா், வட்டாட்சியா் முத்துமாரி, நகா்மன்றத் தலைவா் பரிமளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

உதகை ரோஜா கண்காட்சி நிறைவு

உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பா... மேலும் பார்க்க

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்ன... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோ... மேலும் பார்க்க

மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை:முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது

கூடலூா், மே 12: கோவை, மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த குட்டி யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. கோவை மாவட்டம், மதுக்கரை வனப் பகுதியில் தாயைப்... மேலும் பார்க்க

ரோஜா மலா் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா மலா் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை

உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறாா். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலா் ... மேலும் பார்க்க