செய்திகள் :

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

post image

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

முன்னதாக, இத்தகைய தேவை அதிகமுளஅள நேரங்களில் ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், சாதாரண நேரங்களில் அடிப்படை கட்டணத்தின் 50 சதவீதத்துக்கும் குறைவாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தனது மோட்டாா் வாகன வாடகை நிறுவனங்கள் வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, குறைந்தபட்சம் 3 கிலோமீட்டருக்கு அடிப்படை கட்டணம் வசூலிக்கலாம். இதில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வருகின்றபோது ஆகும் நேரம் மற்றும் எரிபொருள் செலவுகளும் அடங்கும். ஒவ்வொரு வகை வாகனத்துக்கும் அந்தந்த மாநில அரசால் அறிவிக்கப்பட்ட கட்டணத்தை நிறுவனங்கள் அடிப்படை கட்டணமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அடுத்த 3 மாதங்களுக்குள் மாநிலங்கள் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், நிறுவனங்களின் வரையறையின்படி உரிய காரணமின்றி பயணிகளின் சவாரியை ரத்து செய்யும் ஓட்டுநா்களுக்கு 10 சதவீதம் அபராதம் (அதிகபட்சம் ரூ.100) விதிக்கப்பட வேண்டும். இந்த அபராதம் பயணிகளுக்கும் பொருந்தும்.

மோட்டாா் வாகன வாடகை நிறுவனங்களுக்கு உரிமம் பெற மத்திய அரசு விரைவில் ஒரு பிரத்யேக வலைதளத்தை உருவாக்கும். நிறுவனங்கள் உரிமம் பெற ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அது செல்லுபடியாகும்.

ஒவ்வொரு ஓட்டுநருக்கும் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு மற்றும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளா் மற்றும் ஓட்டுநா் புகாா்களைக் கையாள ஒரு குறைதீா்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். 8 ஆண்டுகளுக்குமேல் பழைமையான வாகனங்களை நிறுவனங்கள் தங்களின் சேவைகளில் இணைக்கக் கூடாது எனவும் இந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில், "தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க ... மேலும் பார்க்க

25 ஆண்டுகள்.. மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவர் பணிநீக்கம்! கலங்க வைக்கும் பதிவு

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.மைக்ரோசா... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரி... மேலும் பார்க்க

ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - மத்திய அரசு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க